வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 6

 அத்தியாயம் : 6


தன்னைத் தேடி விகரம் வந்துவிட்டான் என்று நினைத்து பார்த்து சந்தோஷம் அடைந்த ஐஸ்வர்யா, சிறிது பதட்டத்துடனும், நம்ப முடியாத நிலையிலும், "எ.. என்ன சொல்றிங்க? உண்மையைத்தான் சொல்றிங்களா" என்று அவனிடம் தயங்கியபடி கேட்டாள். 


"ஜில்லு!!!! நிஜமா நான் இப்ப உங்க காலேஜ் வெளிய தான் நிக்கிறேன். உங்க காலேஜ் லோகால சுயஒழுக்கம், தனி உரிமை கொள்கை, சர சர... சார" எனக் கல்லூரியின் சுவற்றில் தமிழில் எழுதியிருந்ததை வாசிக்க  திணறினான். 


அவன் சொல்லும் விடயம் உண்மையாக இருக்கவும், "ஓகே... ஒகே இரு.... இருங்க நான் வர்றேன்" என்று அழைப்பை துண்டித்தவள், தோழிகளை கேள்வியுடன் நோக்கினாள் ஐஸ்வர்யா.


"என்ன? எங்களை ஏன் பார்க்கற? போய் உன் ஆளைப் பார்த்திட்டு வாடி" என்றாள் லஷ்மீகா.


"இல்லடி!!! நீங்களும் கூட வாங்க. நான் என்னைக்கு நீங்க இல்லாம எங்கேயும் போயிருக்கேன். என் பேரண்ட்ஸ விட, உங்க கூடத் தான் அதிகமா வெளிய சுத்துவேன். உங்க கூடத்தான் அதிகம் நேரம் இருக்கேன். எனக்கு... எல்லாமே நீங்க தான?" என்று அனைவரிடமும் காலில் விழுகாத குறையாக பேசினாள். 


"ஹே... இப்ப இப்படி தான்டி சொல்லுவ. ஆனா, நாளைப் பின்ன உன் ஆளு கூடத் தான் நீ சுத்துவ. எங்களையெல்லாம் நீ மறந்தாலும் மறந்திடுவ. நாங்க உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கோம்" என்றாள் தீவிதா.


"நோ நோ நோ எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் தான் முதல்ல. அடுத்து தான் ஹஸ்பெண்ட் சைல்டு எல்லாமே... ஸோ வாங்கடி" என்று ஒவ்வொருவரின் கைப்பிடித்து எழ வைத்தாள் ஐஸ்வர்யா.


அவளுக்காக பாவம் தோழி என்ற பாசத்துடன் அனைவரும் அவளுடன் வெளியில் சென்றனர். 


விக்ரம்... தனது நான்கு சக்கர வாகனத்தின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நின்றிருந்தான். 


கண்களுக்கு கருப்பு கலர் கண்ணாடி அணிந்து... இறுக்கிப் பிடித்த கருப்பு கலர் சட்டையுடன் பார்க்க, ஒரு சினிமா நடிகரைப் போலக் காட்சிக் கொடுத்தான்.


"ஐஸ்... உன் ஆளு சூப்பர்டி" என்றாள் தீவிதா.


"அது மட்டுமல்ல இப்பவே உன் மேல இவ்வளவு லவ்வா இருக்கான்" என்றாள் தர்ஷா. 


அனைவரும் ஐஸ்வர்யாவிடம் கிசுகிசுத்தபடி, அவனருகில் சென்றார்கள்.


"ஹாய்" என்று ஐந்து பேரையும் பார்த்துக் கை அசைத்தான் விக்ரம்.


"ஹாய் ப்ரோ நைஸ் டு மீட் யு" என்று பொதுப்படையாகக் கூறினாள் லஷ்மீகா.


அவளிடம் சன்னமாக தலையை ஆட்டியவன் மறுநொடி கண்ணாடியைக் கழற்றிய படி, "என்ன மேடம்!!! நான் என்ன உங்களை கடத்திட்டா போயிடப் போறேன்? துணைக்கு உங்க ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு வந்திருக்கிங்க?" என்று ஐஸ்வர்யாவை பார்த்த படி, சிரித்த முகமாக கேட்டான் விக்ரம்.


"ஆமா ப்ரோ.... ஐஸ்கிரீம் சிலைபோல இருக்கிற எங்க ஐஸ்வர்யாவை நீங்க மட்டுமில்ல, சான்ஸ் கிடைச்சா யாருன்னாலும் கடத்திட்டு போனாலும் போயிடுவாங்க. அதனால, நாங்க படை வீரர்கள் போலக் கூடவே வந்திருக்கோம்" எனச் சிரித்த படி ஐஸ்வர்யாவிற்கு பதிலாக தர்ஷா பதில் கூறினாள்.


விக்ரமோ, "நானும் இந்த ஐஸ்கிரீம் சிலையை... சீக்கிரம் என் வீட்டுக்கு கடத்திட்டுப் போலான்னு தான்  நினைக்கறேன் சிஸ்டர்" என்றான். அவனது பார்வை ஐஸ்வர்யாவிடமே நிலைத்திருந்தது. 


அதனை அறிந்த தீவிதா, தலைகுனிந்த படி நின்றிருந்த ஐஸ்வர்யாவின் முகவாயை பிடித்து நிமிர்த்தி, "ஹே ஐஸ்!!! உன்னைப் பொண்ணு பார்க்கும் படலம் இங்க நடந்திட்டு இருக்கு. இதோ மாப்பிள்ளை வந்திருக்காங்க. எங்களுக்கெல்லாம் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்த்துச் சொல்லு?" என்று அமைதியின் சொரூபமாய் மாறிப் போய் நிற்கும் ஐஸ்வர்யாவை கேலி செய்தாள்.


ஐஸ்வர்யாவை தவிர ஏன் விக்ரமே அவளது கேலி பேச்சில் சிரித்துவிட, "ஹே சும்மா இருடி" என்று தோழியை அதட்டினாள்.


"ஓகே.... ஓகே... நான் கிளம்புறேன். ஜில்லுனு அழைக்க ஜி…” என்று வார்த்தையை விட்டவன், மற்றவர்கள் இருப்பதால், ஐஸ்வர்யா என்று மாற்றினான். அதனை தோழிகள் கவனித்தனர். ஆனால் அவனிடம் அவனது ஜில்லு என்ற அழைப்பை பற்றி காட்டி கொள்ளவில்லை. 


“ஈவினிங் எத்தனை மணிக்கு உன்னை பிக்அப் பண்ண வரணும்னு எனக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பு" என்றான்.


"நா... நான் ஸ்கூட்டியில வந்திருக்கேன்" எனத் தயங்கிய படி  கூறினாள் ஐஸ்வர்யா. 


"அதுனால என்ன? என் ட்ரைவரை உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வரச் சொல்வோம். தட்ஸ் ஆல்” என்று தோளைக் குலுக்கினான். 


ஐஸ்வர்யாவோ யோசித்தவாறு இருக்க... 


“பை... சிஸ்டர்ஸ் பை" என்று அனைவரிடமும் கையை ஆட்டிவிட்டு  வாகனத்தினுள் அமர்ந்தான். உடனே வாகனம் நகர்ந்தது.


"ஹே பார்க்க நல்லா இருக்கான். நல்லா பேசறான். குயிக்கா ப்ராப்ளத்தை சால்வ் பண்றான். நல்ல பிஸ்னஸ் ஃபீல்டில் இருக்கான். ஸோ... வீட்டுக்குப் போனதும், உன் மம்மி, டாடிகிட்ட ஆர்க்யூ பண்ணாம, மேரேஜிற்கு எஸ் சொல்லிடு. அது தான் உன் ப்யூச்சருக்கு நல்லது"  அறிவுரை வழங்கினாள் லஷ்மீகா.


அனைவரின் நேர்மறையான வார்த்தையில் ஒரு கணம் விக்ரமை தனது மணக்கண்ணில் நினைத்து பார்த்துவிட்டு, "எனக்கும் அவனை முதல்ல பிடிக்கல. ஆனா இப்ப பிடிச்சிருக்கு" என்று மெல்லிய வெட்க புன்னகையுடன் கூறினாள் ஐஸ்வர்யா. 


உடனே அவனைவரும் அவளை கேலி செய்யும் விதமாக 'ஓஹோ' என்று ஒன்றாக கத்தினார்கள். 


"நம்ம க்ரூப்ல இலியா, ஐஸூக்கு அவங்க ஆசைப்பட்ட மாதிரி ஹஸ்பெண்ட் அமைஞ்சிடுச்சு. நமக்கு எப்படி வாய்க்கப் போதோ? ஆனா பயமாவும், கொஞ்சம் ஈகராவும் தான் இருக்கு" எனச் சொல்லி சிரித்தாள் தர்ஷா.


"ஹே அலையாதடி" என்று தீவிதா அவளை கிண்டல் செய்யவும்,


"லஷ்மீக்கு எப்படிப்பட்ட ஹஸ்பெண்ட் வரணும்னு அவ இன்னும் சொல்லவேயில்லையே?" என்று யோசித்துக் கொண்டிருந்த லஷ்மீகாவை கைக்காட்டினாள் இலியா.


"அவளுக்கு அவங்க டாடி ஃபாரின் மாப்பிள்ளையை தான் பார்ப்பார்னு நினைக்கறேன்" என்று ஒரு யூகத்தின் பேரில் கூறினாள் தீவிதா.


"ஆமாடி!!! சிங்கப்பூர்ல தான், ஒரு மாப்பிள்ளை இருக்கிறதா லாஸ்ட் டைம் வீட்ல பேசிக்கிட்டாங்க. ஆனா…" என்றவள் அத்தோடு பேச்சை நிறுத்திட்டு அனைவரையும் யோசனையுடன் பாரத்தாள். தன் மனதில் உள்ளதை அவர்களிடம் சொல்வோமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 


"ஆனா... உனக்கு எங்களையெல்லாம் விட்டுப் போக மனசில்ல. அப்படித் தான?" எனக்  கேட்டாள் ஐஸ்வர்யா. 


அதற்கு லஷ்மீகா பதில் சொல்வதற்குள்,


"ஹே விடாது கருப்பு உன்னை பின் தொடர்றது போல, இலியா அங்க தானடி மேரேஜ் ஆனதும் செட்டில் ஆகப் போறா, அப்புறம் என்ன? அவ கூட நல்லா என்ஜாய் பண்ணு" என்று நினைவு வந்தவளாக கூறினாள் தீவிதா. 


உடனே செல்லமாக அவளது கன்னதை கிள்ளினாள் இலியா.


"நான் அப்ராடு எல்லாம் போகமாட்டேன்ப்பா. இங்க... நம்ம கன்ட்ரீல எந்த ஸ்டேட்னாலும் பரவாயில்ல. வெல் டேலண்ட்டான ஒரு போலீஸ் ஆபிஸரை தான் மேரேஜ் பண்ண நினைக்கறேன்" என்று, அவ்வேளையில் தோழிகளிடம் மனம் திறந்தாள் லஷ்மீகா.


அதனை சற்றும் எதிர்பாராத தோழிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.


"என் ஹஸ்பெண்ட் ஒரு கன்னியமான, நேர்மையான, டேலண்ட்டான போலீஸ் ஆபிஸிர்னு சொல்லிக்க நான் பெருமைபடணும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.


"ஹே நீ யாரைக் கட்டிக்க நினைக்கிற தெரியுமா?" என்று அதிர்ச்சியாக இலியா கேட்கவும்,


சிறிதும் யோசிக்காமல், "போலீஸ் ஆபிஸரை" எனச் சந்தோஷமாக கூறினாள் லஷ்மீகா.


அவளின் சந்தோஷம் அனைவருக்கும் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. 


"போலீஸ் ஜாப்ல உள்ள மாப்பிள்ளையா?" என்று தர்ஷா வாயை பிளக்கவும்,


"ஏன்... ஏன் போலீஸ் ஜாப்க்கு என்ன? அந்த ஜாப் தான் ரொம்ப ரெஸ்பெக்டபில் ஜாப். என்னடி ஐஸ்?" என்று, அவளை துணைக்கு அழைத்தாள் லஷ்மீகா. 


ஏனெனில் லஷ்மீகாவிற்கு ஐஸ்வர்யா என்றும் துணை நிற்பாள். ஆனால் அவளோ... அமைதியாக லஷ்மீகா சொன்னதை பற்றி யோசித்தாள். 


"அந்த ஜாப் நல்ல ஜாப் தான் இல்லங்கல்ல. ஆனா அன்னைக்கு  பார்த்தோம்ல, அந்த படம் மாதிரி உன் லைஃப் ஆகிடாமடி" எனக் கவலையுடன் கூறினாள் தீவிதா.


"ஹே ஹே... அப்ப போலீஸ் ஜாப்ல உள்ளவங்க கல்யாணமே பண்ணிக்க முடியாதா?" எனக்  கோபப்பட்டாள் லஷ்மீகா.


"லஷ்மீ!!! நான் அப்படி சொல்ல வரல?"


"தீவி... அவங்களும் நம்மளை மாதிரி ஒரு நார்மல் பெர்சன் தான். அவங்க மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா, அவங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி, ட்யூட்டி டைம், இதெல்லாம் மத்த ஜாப் காட்டிலும் அதிகம். 


எனக்கு அன்னைக்கு படம் பார்த்தோம்ல ரேயன், அப்படியொரு பெர்சன் தான் ஹஸ்பண்ட்டா வேணும். எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்கணும். அந்த இதயத்துக்குள்ள நான் எப்பவும் இருக்கணும்" என்று இனம் புரியாத ஒரு சந்தோஷத்துடன் கூறினாள்.


ஐஸ்வர்யாவோ, "லஷ்மீ... ஒரு முடிவெடுத்திட்டா அதுல இருந்து எப்பவும் மாறமாட்டா. ஸோ... அவளோட விருப்பத்தை நாமளும் ஏத்துக்கணும். நம்ம க்ரூப்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீல்டுல இருக்கிற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா, நமக்குத் தான நல்லது. 


லஷ்மீ... ஹஸ்பெண்ட் ஒரு போலீஸ் ஆபிஸர்ன்னு சொல்லிக்க, நமக்கும் பெருமையா இருக்கும். எனி ஹெல்ப்னாலும் ஆபிஸர் கிட்ட கேட்டுக்கலாம்" என்று, மற்ற தோழிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு கூறினாள்.


"ஆனாலும்"


"ஹே நீயா மேரேஜ் பண்ணிக்க போற? என்ன ஆனாலும் உனாலும்ங்கிற" என்று நேரிடையாக தோழியிடம் எடுத்தெறிந்து சட்டென்று பேசிவிட்டாள் லஷ்மீகா.


அதனால் அனைவரும் அமைதியாகி விட்டனர்.


அவர்களின் மெளனம் லஷ்மீகாவை வருத்தமடைய செய்யவும், "நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியுது. ஆனா, இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோன்னு எடுத்த எடுப்பிலேயே என்னைய பயமுறுத்தாதிங்கடி. நம்ம வாழ்க்கைய நாம தான் வாழ்ந்து தான் பார்க்கணும். ஒதிங்கிப் போய்யிடக் கூடாது. நேசிச்சிட்டே வாழணும். யோசிச்சிட்டே இருக்கக் கூடாது. ஏன்னா ஒரே ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில என்ன ஆனாலும் வாழ்க்கைய லவ் பண்ணிட்டே வாழணும்" என்று உணர்வுப்பூர்வமாகக் கூறி முடித்தாள் லஷ்மீகா.


அவளின் உருக்கமான பேச்சில், அனைவரின் உள்ளமும் நெகிழ்ந்து விட, "ஹே லஷ்மீ.... நீ விரும்புற மாதிரியே, ஒரு வெல் டேலண்ட்டான போலீஸ் ஆபிஸர், கண்டிப்பா உனக்கு ஹஸ்பெண்ட்டா கிடைப்பாங்க. டோண்ட் பீல் ஹாங்..." என்றாள் இறுதியாக தீவிதா.


அவளை போல மற்றவர்களும் கூறவும், தோழிகள் ஆதரவு கிடைக்க பெற்றதை நினைத்து மனதிற்குள் சந்தோஷம் அடைந்தாள். 


சீக்கிரம் அவனை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை மனதிற்குள் பிறக்க, தன் மனதை கொள்ளை கொண்ட அந்த காவலனை பற்றி  எப்படி கண்டுப்பிடிப்பது என்று தோழிகளிடம் அபிப்பிராயம் கேட்கலாம் என முடிவெடுத்தாள். 


***



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *