வியாழன், 20 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 13

 அத்தியாயம் : 13

மறுநாள் தர்ஷாவை தவிர, அனைவரும் எஸ்எஸ் வணிக வளாகத்தை அடைந்தார்கள்.


"தர்ஷா… என்ன பண்ணிட்டு இருக்காளோ? நம்மளை பத்திதான் நினைச்சிட்டு இருப்பா" என்று தீவிதா சொல்லவும், 


"நீ சொல்ற மாதிரி மாட்டுக்கார மாமன் பையன் வந்தா  அவனை விரட்டுறதை பத்தி யோசிச்சிட்டு இருப்பா தர்ஷா. அவ ரொம்ப போல்டான பொண்ணு" என்றாள் இலியா.


ஐஸ்வர்யாவோ, "ஆமா நீ இப்படியே காலத்துக்கும் மத்தவங்களை பார்த்து அதிசயப்பட்டுட்டே இரு. நீ ஒரு காலமும் ஒன்னும் பண்ணிடாத" என்று அவளை சடைத்தாள்.


"ஹே இலியாவை சொல்லி குத்தமில்லடி. அவளோட பேரன்ட்ஸ் அவளை இப்படி வளர்த்திருக்காங்க. அதுக்கு இவ என்ன செய்வா. இலியா ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர்.  நம்மளை மாதிரி கேள்வி கேட்கிற பொண்ணுங்களை விட இவளை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுற பொண்ணை தான் ஜென்ஸ்க்கு பிடிக்கும். ஸோ… அஜய் ரியலி லக்கி. இலியாவை ரொம்ப லவ் பண்ணுவாங்க" என்றாள் லஷ்மீகா.


அவள் கூறியதை மறுப்பது போல தலையாட்டியவள், "இந்தக் காலத்துல சாஃப்ட் கேரக்டரா இருந்தா, ஏறி மிதிச்சிட்டு போயிடுவாங்கடி. இங்க பாரு இலியா... மேரேஜ் ஆனதும், கொஞ்சம் உன் ஆக்டிவிட்டிஸ்ஸை சேன்ஞ்ச் பண்ணிக்க. யாருக்கும் பயப்படாத. உன் ஹஸ்பண்டே ஆனாலும், தைரியமா எதிர்த்து நில்லு" என்று சொல்லிக் கொடுத்தாள் ஐஸ்வர்யா.


"சரிடி" என்று சிறு போல தலையாட்டினாள் இலியா.


"ஓகே... ஜாப் பத்தி உங்க வீட்லலாம் என்ன சொன்னாங்க?" என்று நினைவு வந்தவள் போலக் கேட்டாள் தீவிதா.


"விக்ரம்!!! என்ன வொர்க் போக வேணான்னு சொன்னான்டி. நான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன். அவனுக்காக நான் வேலைக்குப் போகக் கூடாதாம். என்கிட்டையே கன்டிஷன் போடுறான்" என்று கண்களை விழித்தாள் ஐஸ்வர்யா.


"என் டாடியும் அதைத்தான் சொன்னாங்க. நான் ஒரு வருஷமாவது வேலைக்கு போவேன்னு சொல்லிட்டேன்" என்றாள் லஷ்மீகா.


"எனக்கு அது பத்திலாம் தெரியாது, ஒழுங்கா எல்லோரும் ஜாப்க்கு வர்றிங்க. இல்லன்னா உங்க ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிடுவேன்" என்று அனைவரையும் மிரட்டுவது போலப் பார்த்தாள் தர்ஷா. 


"இலியாவை தவிற நாங்க எல்லாரும் வந்திருவோம்  யு டோண்ட் ஒர்ரி" எனக் கூறிவிட்டு தமயனை அழைத்துக் கொண்டு வணிக வளாகத்திற்குள் நுழைந்தாள் லஷ்மீகா. 


உடைகள், காலணிகள், அழகு சாதனபொருட்கள் என்று நால்வரும் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தார்கள்.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வணிக வளாகத்தில் அதிகபடியான கூட்டம் வேறு இருந்தது. 


"டாங்கி!!! எனக்குக் கோர்ட் வேணும்" என்று லஷ்மீகாவின் கைப்பிடித்து அசைத்தான் பவன்.


"இரு டா எனக்கு எடுத்துட்டு உனக்கு எடுப்போம்"


"உனக்கு எத்தனை ட்ரெஸ் தான் எடுப்ப? போதும் உனக்கு எடுத்தது. வா என்னோட செக்ஷனுக்கு போவோம்" என்று அவளின் கைப்பிடித்து இழுத்தான். 


"டாங்கி!!! ரொம்ப பேசாத. அப்புறம் உனக்கு ஒன்னு கூட வாங்கித் தரமாட்டேன்" என்று வழக்கம் போல எதார்த்தமாக அதட்டினாள்.


பவனோ… அவளிடம் கோபித்துக் கொண்டு முகத்தை திருப்பி நின்றுக் கொண்டான். 


அவனது கோபத்தை கண்டுக்கொள்ளாது, மேற்கொண்டு தோழிகளிடம் பேசியபடி உடைகளை தேர்ந்தெடுப்பதில் தன் கவனத்தை செலுத்தினாள் லஷ்மீகா. 


ஒரு அரை மணி நேரம் கழித்து நினைவுவந்தவளாக, பவனை  திரும்பிப் பார்த்தாள்.  அவனைக் காணவில்லை.


"பவன்… பவன் பவன்" என்று அவனை காணாது அதிர்ச்சியுற்றாள் லஷ்மீகா.


அவளது அலறலில் அனைவரும் என்னவென்று கேட்டார்கள். 


"பவனை காணல?" என்றாள் அதிர்ச்சியாக… 


"ஹே எங்கடி போனான்?" என்று தீவிதா கேட்கவும், 


"இங்க தான்டி இருந்தான்" என்றாள் லஷ்மீகா. அவளின் கண்கள் கலங்கிவிட்டன.


"வாங்க ஆளுக்கொரு புறம் தேடுவோம்" என்று விரைந்து செயல்பட்டாள் ஐஸ்வர்யா.


அனைவரும் வணிக வளாகத்தில் ஆளுக்கொரு மாடியில் ஏறி இறங்கி, அவனைத் தேடிப் பார்த்துவிட்டு வந்தார்கள். பவனை காணவில்லை. 


"அய்யோ பவன் எங்க போனான்? பவன்" என்று பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்தவாறு கையை பிசைந்தாள் லஷ்மீகா.


"ஹே அழாதடி. முதல்ல அன்னைக்கு உன் ஆளு சொன்ன நம்பருக்குக் கால் பண்ணி பவனை காணலன்னு சொல்லு" என்று தக்க சமயத்தில் அறிவுரை கூறியவள், அவளது கை பையிலிருந்து செல்போனை எடுத்து அவளிடம் நீட்டினாள் ஐஸ்வர்யா.


உடனே அந்த நம்பருக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள் லஷ்மீகா. 


"ஓகே மேடம் நீங்க மறுபடியும் அங்க கொஞ்சம் தேடிப் பாருங்க. சித்தார்த்தன் சார் உங்களை இமிடியட்டா கான்டாக்ட் பண்ணுவாங்க" என்றனர்.


மறுபடியும் அனைவரும் சென்று பவனைத் தேடினார்கள்.


சிறிது நேரத்தில் புதிதான எண்களிலிருந்து லஷ்மீகாவிற்கு அழைப்பு வந்தது. 


அந்த அழைப்பை பதட்டத்துடன் பார்த்தவாறு இருந்தாள்.


"கால் அட்டன் பண்ணு ஆபிஸரா இருக்கும்" என்று லஷ்மீகாவை அவசரப்படுத்தினாள் ஐஸ்வர்யா. 


சட்டென்று அழைப்பை ஏற்று செல்போனை காதிற்கு கொடுத்தவள், "ஹ… ஹலோ" என்றாள் தட்டுதடுமாறி. 


"ஐ எம் சித்தார்த்தன் ஐபிஎஸ். குழந்தையைக் காணோம்னு கால் பண்ணிருந்தீங்களா? ரைட் நெவ், நீங்க எங்க இருக்கீங்க?" என்று, தூப்பாக்கியில் இருந்து வரும் தோட்டா போன்று பட் பட்டென்று அவனது வார்த்தைகள் வெளிப்பட்டன.


அவன் தான் எனத் தெரிந்த பின்னர் கொஞ்சம் நிம்மதி அடைந்தவள், “சார்... நா... நான் எஸ்எஸ் ஷா... ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல சிக்ஸ்த் ப்ளோர்ல இருக்கேன்" என்றாள் லஷ்மீகா.


"க்ரவுண்ட் ப்ளோர் வாங்க"


அழைப்பு துண்டிக்கப்பட்டதும், தோழிகளுடன் வேகமாக கீழே விரைந்தாள்.


காக்கி உடையில் நெஞ்சை நிமிர்ந்துக் கொண்டு, பின்னால் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் சித்தார்த்தன். அவனுடன் நாலு பேர் உடன் நின்றிருந்தார்கள். அதில் விஷாலாக்ஷாவும் இருந்தாள்.


"சார், எப்படியாவது என் தம்பிய கண்டுப்பிடிச்சி கொடுங்க சார் ப்ளீஸ்..." என்று அவனிடம் கெஞ்சிக் கேட்பது போலக் கேட்டாள் லஷ்மீகா.


அவளைக் கூர்ந்து கவனித்தவன், "நீங்க ஸ்கூட்டி ஆக்சிடன்ட் பண்ண பொண்ணு தான? உங்க கூட வந்த பையனைத் தான் காணோமா?" என்று நினைவுவந்தவனாக கேட்டான் சித்தார்த்தன். 


"ஆமா சார்... நானும் அவனும் தான் வந்தோம். நாங்க பர்சேஸ் பண்ணிட்டு...." என்று, நடந்தவற்றை தவனை முறையில் அழுத படி கூறினாள்.


நடந்த விபரங்களை கேட்டு முடித்தவுடன் தாடையைத் தடவியபடி, "இப்படித்தான் ஹேர்லஸ்ஸா இருப்பீங்களா?” எனக் கேட்டான். 


அவனின் கேள்வியில் மேலும் அதிர்ச்சி அடைந்தாள் லஷ்மீகா. 


அவள் கையிலிருந்த கை பையை பார்த்தபடி, “இந்த ஹேண்ட் பேக்கை கைல வச்சுக்க தெரிஞ்ச உங்களுக்கு, அந்த சின்ன பையனை உங்க கண்ட்ரோல்ல வச்சிக்க முடியலையா ஆங்...? ஷாப்பிங் வந்துட்டா, ஏன் லேடிஸ்லாம் இப்படி மாறிடுறீங்க?" என்று திட்டினான்.


அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் லஷ்மீகாவின் இதயத்தை ரணமாய் கீறியது. வேறு யாரோ சொல்லியிருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது போல, கண்ணீருடன் தோழிகள் புறம் திரும்பினாள்.


அவளின் கைப்பிடித்து, "லஷ்மீ!!!  டோண்ட் பீல். முதல்ல பவனை கண்டுப்பிடிக்கணும்" என்று ஆறுதல் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஓகே… உங்க தம்பியா? அந்த பையன் போட்டோ... என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தான். இதை எல்லாம் 7899... இந்த நம்பருக்கு இமிடேட்டா செண்ட் பண்ணுங்க" என்றவன் விஷாலாக்ஷா பக்கம் திரும்பினான்.


"விஷா... நான் இங்க உள்ள சிசிடிவி கேமராவை பார்க்கிறேன். நீ கண்ட்ரோல் ரூமிற்கு பையனை பத்தி இன்பர்மேசன் கொடு. செக் போஸ்ட்ட அலாட் பண்ணு" என்று விரைந்தான்.


அவன் கூறிய எண்களுக்குத் தற்போது கடைக்குள் வைத்துத் தானும், பவனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பிவிட்டு, மனம் தாளாமல் வணிக வளாகத்தின் முன்னே இருந்த பிள்ளையார் சிலையின் அருகில் சென்று... கண்ணீருடன் பவன் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று வேண்டினாள் லஷ்மீகா. 


அவளுக்குப் பக்க பலமாக தோழிகள் உடன் சென்றனர்.


சிசிடிவி கேரமாவில் ஒருவன் பவனை அழைத்துச் செல்வதை கண்டுப்பிடித்து, உடனே அவனை போட்டோ எடுத்துக் கொண்டவன், வேகமாக நடுக்கூடத்திற்கு வந்தான் சித்தார்த்தன். 


பிள்ளையார் சிலை முன்பு நின்றிருந்த லஷ்மீகாவிடம், "உங்க தம்பிய இவன் தான் கூட்டிட்டுப் போயி இருக்கான். இவனை உங்களுக்குத் தெரியுமா?"  எனக் கேட்டபடி, தொலைப்பேசியை அவளிடம் காண்பித்தான்.


அதில் இருந்தவனை பார்த்துவிட்டு, "சார்... இவன் அன்னைக்கு நீங்க ஆட்டோ பிடிச்சு கொடுத்தீங்கள்ல, அவன் தான்" என்றாள் சிறிது தடுமாற்றத்துடன் லஷ்மீகா.


"எஸ்... அவனே தான். எனக்கும் நியாபகம் வந்திருச்சு" என்று ஏதோ யோசித்தான். 


அவர்களது அருகில் விஷாலாக்ஷா வந்தாள். 


அவளிடம் சில விஷயங்களை கூறியவன், "நீங்க இரண்டு பேரும் கூட வாங்க... நீங்க இரண்டு பேரும் இந்த மேடம் கூட போங்க. பையனை பத்தி இன்பர்மேசன் கிடைச்சா உடனே இன்பார்ம் பண்ணுங்க. 


எப்படியும் அந்த ஆட்டோகாரன் கொஞ்சதூரம் தான் போயிருக்க முடியும். இங்க இரண்டே இரண்டு வழி தான் இருக்கு. ஸோ, சீக்கிரம் போனா அவனைப் பிடிச்சிடலாம். நாங்க லெஃப்ட் சைடு போறோம்" எனக் கூறிவிட்டு வேகமாக நகர்ந்தான். 


அவன் பின்னால் ஐஸ்வர்யாவும், லஷ்மீகாவும் ஓடினார்கள். மற்றவர்கள் விஷாலாக்ஷாவின் பின்னே சென்றார்கள். 


சித்தார்த்தன் ஜூப்பை கிளப்பினான். விஷாலாக்ஷா வந்த வாகனத்தில் மற்றவர்கள் கிளம்பினார்கள். 


ஆளுக்கொளு பக்கம் பவனை தேடி சென்றார்கள். 


ஆட்டோ பற்றிய விபரங்கள் தொலைபேசியின் வாயிலாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து  சித்தார்த்தனுக்குத் தெரிவிக்கப்பட்டது. சித்தார்த்தன் செல்லும் வழியில் தான் அந்த ஆட்டோ சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 


அவனோ… விஷாலாக்க்ஷாவிற்கு அழைத்து தான் வந்த பாதையில் வரும்படி பணித்துவிட்டு, "அன்னைக்கு ஆட்டோல போகும் போது இன்னைக்கு ஷாப்பிங் போறோம்னு இரண்டு பேரும் பேசிக்கிட்டிங்களா?" என்று லஷ்மீகாவிடம் கேட்டான் சித்தார்த்தன்.


அழுத படி, ஆமா என்று தலையாட்டினாள். 


"அதான் பையனை தூக்கிட்டான்" என்றவன் கோபமாக... “நீங்களே ஆட்டோல போகும் போது அவனுக்குக் க்ளூ கொடுக்கிறது போல, யோசிக்காம எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க. அதனால பாதிக்கப்படுறது சின்னப் பசங்கதான். எத்தனை பேரை இந்த மாசம் கடத்தி, உயிரோட இருக்கும் போதே ஆர்கன்ஸ் திருடிருக்காங்க தெரியுமா?" என்று கத்தினான். 


அவனின் வார்த்தையில் ஆடிப் போனாள் லஷ்மீகா. ஐஸ்வர்யா கூட மனதிற்குள் அதிர்ந்துவிட்டாள். 


"பார்த்தா எஜூகேட்டட் மாதிரி இருக்கீங்க? எந்த விஷயத்தை எப்ப... எங்க பேசணும்னு தெரியாதா? அன்னைக்குக் கடத்தினா சந்தேகம் வரும்னு, இன்னைக்கு கடத்திருக்கான். அதுக்குத்தான் அன்னைக்கு உங்களை தனியா கூப்பிட்டு, கன்ட்ரோல் ரூம் நம்பரை பத்தி ரகசியமா சொன்னேன். நீங்க போன் போடும் போது கன்ட்ரோல் ரூம்ல இருந்து உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருப்பாங்களே" என்று சடைத்தான்.


அவனின் அத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத தவித்தாள் லஷ்மீகா.


***

என் வசமாகுமோ! - அத்தியாயம் 12

 அத்தியாயம் : 12


மறுநாள்… மின் தகனத்தில் ஒரு ஓரமாக கிடந்தான் அருள். 


எப்பொழுதும் ஒரு பத்து பதினைந்து பேரை வைத்து கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தவன், தற்போது பார்க்க ஆளின்றி கிடந்தான். 


இறுதியாக மனைவி, குழந்தைகள் மட்டும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 


அடுத்த சில மணி நேரத்தில்,  அருளின் சடலம் சாம்பலாக அருளின் மனைவி செல்வியிடம் கொடுக்கப்பட்டது.


"அய்யோ!!! எப்படி இர்ந்த மன்ஷன, இப்டி பவ்டரா கொடுத்துட்டான்களே! எம்புள்ளைகளுக்கு இனி ஆர் இர்க்கா?" என்று கத்தி கூப்பாடு போட்டாள்.


அருளின் குழந்தைகள் கண்ணீருடன் நின்றிருந்தனர்.


"சீக்கிரம் இடத்தைக் காலி பண்ண சொல்லுங்க" என்று அவர்கள் அருகில் நின்றிருந்த காவலர் ஒருவரை பணித்தாள் அங்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த விஷாலாக்ஷா.


"ஏம்மா!!! இங்கலாம் அழுதிட்டு இருக்காம, முதல்ல இடத்தைக் காலி பண்ணு" என்று செல்வியிடம் பணித்தான் காவலர். 


"யோவ்!!! என்னைய்யா எம் புருஷே செத்துட்டானு ஒங் வீரத்த என் கிட்ட காட்டுக்றீயா? எம் புருஷே ஒத்தையா நின்னுகன்னு ஒன்போது பேரோட கழுத்த அறுப்பான்யா. அவன இப்டி பவ்டரா கைல தந்துன்னு, அல்லாப்பேரும் குளிருவுட்டு அலையுறீங்களா? வருவான்யா என் தம்பி. அவ... அவ வந்துன்னு, உங்களோ கிழிப்பான்யா ஆங்..." என்று கத்திவிட்டு குழந்தைங்களை அழைத்துக் கொண்டு விரைந்தாள் செல்வி.


அவள் அகன்றதும், அங்குக் கூடியிந்த காவலர்களை கலையும் படி பணித்துவிட்டு, சித்தார்த்தனை  தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தாள் விஷாலாக்ஷா.


செல்வி புலம்பியதை கேட்டுவிட்டு, "ஓ... சாபமா?" என்றான் சித்தார்த்தன்.


"சிங்கம், அடுத்த மாசம் ஜெயிலில் இருந்து ரிலீஸாகுறான். அந்த தைரியத்துல தான் பேசறாங்க" 


"அவன் ரிலீஸானாத்தான? நேத்து மாதிரி கேஸை ஸ்ட்ராங் பண்ணிடுறேன்" 


"ஓகே சித்து யு கேரியான்" 


"பை விஷா!!!" எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க முயன்றான் சித்தார்த்தன். 


அவனிடம் தன் காதலை தெரிவிக்க எண்ணிய விஷாலாக்க்ஷா, "சித்து.... சித்து லைன்ல இருக்கீயா?" என்று அவசரகதியாக கத்தினாள். 


"யா... டெல் மீ"


"அ... அது வந்து சன்டே வெளிய போகணும்"


"ஓகே"


"ஆஃபிஸிலா இல்ல ஃபர்சனலா?" என்று தயங்கி தயங்கி கூறினாள். 


"ஃபர்சனலா????" என்று யோசனையாக கேட்டுவிட்டு, "சன்டே மார்னிங் கால் பண்ணு சொல்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் சித்தார்த்தன்.


'சித்து!!! கண்டிப்பா என் லவ்வை நீ ஏத்துக்கணும். நீ என் காதலை ஏத்துக்கலன்னா, நான்... உயிரோட  இருக்க மாட்டேன் சித்து. நீ எனக்கு வேணும்' என எண்ணிய படி வீட்டிற்கு விரைந்தாள் விஷாலாக்க்ஷா.


அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், "வாங்க மேடம் என்னைக்கு ஹேப்பீ ந்யூஸ் சொல்விங்க?" எனக் கேட்டாள் அவளது தமக்கையான நடாஷா. 


அவள் எதை கேட்கிறாள் என புரிந்துக் கொண்ட விஷாலாக்க்ஷா சன்னமான வெட்கத்துடன், "சன்டே சித்து கிட்ட என் லவ்வை சொல்ல போறேன்" என்றாள் சந்தோஷமாக... 


"சீக்கிரம் சொல்லித் தொலைடி. அக்கம் பக்கம்  கேள்வி கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. என்ன உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையானு ஒரே கேள்விய கேட்டு, என் உயிரை வாங்குறாங்க" என்று சமையலறையில் இருந்து வெளி வந்த அவர்களின் அண்னை கிருஷ்ணவேணி புலம்பினாள். 


"அம்மா… இது என்ன சமைக்கிற விஷயமா ஈசியா செஞ்சு முடிக்க???" 


"இல்லன்னாலும் நீங்க ஒரு கேஸை சீக்கிரம் முடிச்சிருவிங்க?" என்று அவர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டவர் போல மகளை கேலி செய்தவாறு, மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தார் அவர்களின் தந்தை பாஸ்கரன். 


"இதுக்குத்தான் நான் வீட்டு பக்கமே வர்றதில்ல. ஹாஸ்டல்லையே இருந்திடுறேன்" என்று அனைவரும் தன்னை கேலி செய்வதை பொறுக்கமுடியாது எழுந்தாள் விஷாலாக்க்ஷா. 


அவளின் கைப்பிடித்து அமர வைத்து, "போதும்டி உனக்கு இந்த வேஷம். சீக்கிரம் சித்துவை கல்யாணம் பண்ணி, குழந்தைங்களை பெத்துட்டு ஒண்ணு வீட்டோட இரு. இல்லன்னா வேற எதாச்சும் வேலைய பாரு" என்று அறிவுரை வழங்கினாள் கிருஷ்ணவேணி. 


'சித்துவோட கல்யாணம் அவனை போல குழந்தைகள்' என்று மனதிற்குள் எண்ணிப் பார்த்து சந்தோஷம் அடைந்த விஷாலாக்க்ஷா, அன்னையின் முகம் பார்த்து சரி என்பது போலத்  தலையாட்டினாள். 


"இந்த தடவையாச்சும் சொதப்பாம சித்து கிட்ட உன் விருப்பத்தை சொல்லிடுவீயா? இல்ல அப்பா பேசவா?" எனக் கேலியாய் கேட்டார் பாஸ்கரன். 


"இ… இல்லப்பா நான் பர்ஸ்ட் பேசறேன். ஏன்னா சித்து இப்ப…. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான்" என்றாள் தயங்கியபடி… 


"ஏனாம்???"  என்று யோசனையாக கேட்டாள் நடாஷா. 


"மகாராஷ்டிரால இருக்கும் போது ஒரு ஆக்யூஸ்ட்ட சித்து என்கவுண்டர் பண்ணான். அந்த அக்யூஸ்ட்டோட  அண்ணன் மறுநாள் சித்துவோட அப்பாவை ஷூட் பண்ணிட்டான். அதுனால தான் ராஜா அங்கிள் இறந்தாங்க. ஸோ… மேரேஜ் பண்ணினா தன்னோட வொய்ஃப், குழந்தைக்கு எதாவது ப்ராப்ளம் வரும்னு  கல்யாணம் வேணானு சொல்றான்" என்றாள் விஷாலாக்க்ஷா. 


"முதல்ல இரண்டு பேரும் உங்க வேலைய விட்டுட்டு மேரேஜ் பண்ணுங்க. அடுத்து   ஜாப் பத்தி யோசிக்கலாம்" என்றாள் நடாஷா. 


"நான் இதலாம் யோசிக்காம இல்ல நட்டு. சித்து இந்த ஜாப்பை ரொம்ப லவ் பண்றான். அவன்கிட்ட எப்படி ஜாப்பை விட சொல்ல? இட்ஸ் நாட் பாசிபுல்" என்று தலை அசைத்தாள். 


"சித்து கிட்ட நாங்க பேசறோம். நாங்க பேசினா அவன் கேட்டுக்குவான்" என்று நம்பிக்கையாய் பாஸ்கர் சொல்லவும், 


"ஓகேப்பா… நான் சன்டே அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்" எனக் கூறிவிட்டு எழுந்தாள்  விஷாலாக்க்ஷா. 


தனது அறைக்குள் புகுந்து காக்கி உடையிலிருந்து வேறொரு உடைக்கு மாறியவள், மஞ்சத்தில் சரிந்து, கடந்த இரண்டு நாளாய் சித்தார்த்தனோடு பணியில் இருந்த தருணங்களை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தாள். 


லஷ்மீகாவோ… சித்தார்த்தனோடு முதல் சந்திப்பு இன்பமாக இல்லை என்று தோழிகளிடம் கூறிக் கொண்டிருந்தாள். 


"என்னடி சொல்ற?" அனைவரும் அதிர்ச்சியாகக் கேட்டனர்.


"ஆமாடி!!! முதல் சந்திப்பே இப்படியாகிடுச்சு. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அவன் கொடுத்த நம்பரும் அவனோடது கிடையாது. அது கன்ட்ரோல் ரூம் நம்பராம்" என்றாள் சிறிது வருத்தத்துடன் லஷ்மீகா. 


"நான் அன்னைக்கு சொன்ன மாதிரி, உன் லவ்க்கு உன் தம்பி தான்டி முதல் எதிரியா வந்து நிற்கப் போறான்" என்றாள் சற்று கோபமாக தீவிதா.


இல்லை என்பதாய் தலையை ஆட்டியபடி, "என்னோட முதல் பேபியே பவன் தான்டி. சின்ன வயசிலே, எனக்கு மதர்ங்கிற பொறுப்பக் கொடுத்தவன், நாங்க சண்ட போடுறதெல்லாம், ஐஸ்ட் ஒரு என்டர்டெய்ன்மென்ட்காகத் தான். அவனுக்கும் சித்தார்த்தனை பிடிச்சிருச்சுன்னா எனக்கு ஹெல்ப் பண்ணுவான். ஆனா எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக… அது வேணும் இது வேணும்னு கேட்பான். வாங்கி கொடுக்கலன்னா உன்னை டாடி கிட்ட போட்டு கொடுத்திருவேன்னு பிளாக்மெயில் பண்ணுவான்" என்று சொல்லிச் சிரித்தாள். 


"விடு லஷ்மீ!!! இனி ஒரு சான்ஸ் கிடைக்காமலா போகும் அப்ப… ஆபிஸரை கரக்ட் பண்ணிடு" என்று ஆறுதலாக கூறினாள் ஐஸ்வர்யா.


"உன் மேரேஜ் விஷயம் என்னாச்சுடி?" என்று நினைவு வந்தவளாக அவளிடம் கேட்டாள் லஷ்மீகா.


"அய்யோ!!! ரொம்ப பாஸ்ட்டா மேரேஜிற்கு ஏற்பாடு பண்றாங்கடி. அநேகமாக அடுத்த மன்த்தே மேரேஜ் வச்சிடுவாங்க போல. அதுக்கு மேல விக்ரம்… அப்பப்பா ரொமாண்டிக்கா மெசேஜ் பண்ணியே கொல்றான்"


"இலியா கூடச் சேர்ந்தவனா இருப்பான் போல" எனச் சொல்லி சிரித்தாள் லஷ்மீகா.


உடனே பேச்சை மாற்றிய இலியா, "ஹே லஷ்மீ!!! உன் ஆளு கிடைச்சதுக்கு, நீ எப்ப எங்களுக்கு ட்ரீட் தரப் போற?" எனக் கேட்டாள்.


"கண்டிப்பா பெரிய ட்ரீட் கொடுக்கறேன். தென்… நாளையோட நம்ம காலேஜ் லைஃப் முடியுது. ஸோ... பெரிசா செலிப்ரேட் பண்ணிடுவோம். ஈவினிங் எல்லாரும் எஸ்எஸ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு வந்திடுங்கடி" என்று அனைவரின் பார்வையை சந்தித்தாள் லஷ்மீகா.


தீவிதாவோ, "நாளைக்கு என்னால வர முடியாதுப்பா.  என் டாடியோட தங்கச்சியாம், யாரோ கிராமத்துல இருந்து வர்றாங்களாம். அதனால, டாடி என்னை வீட்டை விட்டு வெளிய வர அலோவ் பண்ணமாட்டாங்க. எனக்காக வேண்டி செலிப்ரேஷனை தள்ளிப் போடுங்கப்பா" எனக் கெஞ்சிக் கேட்டாள்.


"எனக்கு என்னவோ கிராமத்துல இருந்து வரப் போற அத்தை, கூடவே அவங்க பட்டிக்காட்டுப் பையனோட வந்து, வந்த இடத்துல உன்ன... உன் அழகான முகத்தை பார்த்ததுமே அவங்களுக்கு பிடிச்சு போய்... உடனே உங்க அப்பா கிட்ட கல்யாணத்தை பத்தி பேசிச் சம்மதம் வாங்கி, கல்யாணத்த இங்கேயே முடிச்சிட்டு.... கையோடு உன்னை அவங்க ஊருக்கு கூட்டுட்டு போய், அவங்க தொழுவத்துல உள்ள மாட்டுக்கெல்லாம் உன்னை தண்ணீ காட்ட வைக்க போறாங்கனு நினைக்கறேன்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தாள் தீவிதா.


அதனை கேட்டுவிட்டு கடுப்பான தர்ஷா, "என்னடி சொன்ன???" எனக் கேட்டபடி அவளை அடிக்க முனைந்தாள்.  


அவளிடம் அகப்படாமல் மைதானத்தில் ஓடினாள் தீவிதா. 


அவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.


சில நொடியில் தீவிதாவின் கழுத்தை  தன்னுடைய துப்பட்டாவால் இறுக்கிப் பிடித்தபடி, தோழிகளின் அருகில் வந்த தர்ஷா, "நான் தான்டி வர்றவங்களுக்கு தண்ணீ காட்டுவேன்டி" என்றாள் சத்தமாக… 


"வர்றவங்களுக்கு நீ தண்ணீ காட்டு இல்ல காட்டாம போ… அது பத்தி எங்களுக்கு கவலையில்ல. நாளைக்கு நாங்க ஷாப்பிங் போறோம். அடுத்த சன்டே உனக்காக மறுபடியும் ஷாப்பிங் போவோம் ஓகே வா???" என்று தர்ஷாவை சமாதானப்படுத்தினாள் லஷ்மீகா. 


அனைவரும் கல்லூரியை விட்டு பிரிய போகிறோம் என்ற வருத்ததில் ஒன்றாக நின்று விதவிதமாக வித விதமான இடத்தில் நின்று புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள். 


எப்பொழுதும் ஐந்து மணிக்கே வீட்டை பார்த்து விரைபவர்கள், அன்று ஆறு மணி வரை கல்லூரியில்  பொழுதை கழித்துவிட்டு, மனசில்லாமல் அவரவர் வீட்டை நோக்கி விரைந்தார்கள். 


அன்று தான் வர தாமதமாகும் என்று லஷ்மீகா கூறியதால், பவனை பள்ளியிலிருந்து  வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் சரத். 


வீட்டிற்குள் லஷ்மீகா நுழைந்ததும், அவள் கொண்டு வந்திருந்த பரிசு பொருட்களை பார்த்துவிட்டு, அவளிடம் அதை பறித்து பிரித்து பார்த்தான் பவன்.


தோழிகள் நால்வரும் ஆளுக்கொரு பரிசு பொருளை லஷ்மீகாவிற்கு கொடுத்திருந்தார்கள். அதே போல லஷ்மீகாவும் அனைவருக்கும் ஒரு பரிசு கொடுத்துவிட்டு வந்திருந்தாள். 


"ஒரு கிஃப்ட்டும் நல்லாயில்ல. இதுவே என் ப்ரெண்ட்ஸா இருந்திருந்தா விதவிதமா சாக்லெட், கேக்ஸ்னு கொடுத்திருப்பாங்க. உன் ப்ரெண்ட்ஸ் தத்தி" என்று லஷ்மீகாவை திட்டினான் பவன். 


"மங்கி கூட்டம் எப்பவும் திங்கறதுல தான இருக்கும். நீயும் உன் ப்ரெண்ட்ஸூம் சரியான மங்கி கூட்டம்!!!" என்று பவனை திட்டினாள் லஷ்மீகா. 


"நீங்களாம் டாங்கி கூட்டம். அதான் பாரு பேப்பரு, போட்டோனு உன் ப்ரெண்ட்ஸ் கொடுத்திருக்காங்க" 


இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, "ஆரம்பிச்சிட்டிங்களா???" என்று அதட்டினார் சரத். 


இருவரும் இருந்த இடத்தை விட்டு உடனே அகன்றார்கள்.


***

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 11


செவ்வாய், 18 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 10

 அத்தியாயம் : 10


அருளின் ஆட்களில், அவன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும்  பாஸ்கர் என்பவனை மட்டும் தனியாக அடைத்து வைத்திருந்தார்கள். 


அவ்விடத்திற்கு செல்ல நெடுஞ்சாலையில்  ஜூப்பை இயக்கி கொண்டிருந்த சித்தார்த்தன், சட்டென்று   குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, மாற்று வழியில் சென்றான். 


ஒரு கையால் வாகனத்தை இயக்கியபடி, மற்றொரு கையால் ஜூப்பில் இருந்து இரண்டு முகமுடியை எடுத்து, ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை தான் அணிந்தபடி, "விஷா!!! நம்மளை யாரும் ஃபாலோ பண்றாங்களானு செக் பண்ணு" என்று யோசனையாக கூறினான். 


எதார்த்தமாக பார்ப்பது போல நாலாபுறம்  யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று ஒரு பார்வையை பார்த்துவிட்டு, "நோ சித்து…" என்றாள் விஷாலாக்க்ஷா. 


ஒரு வேப்ப மரத்தின் அருகில் ஜூப்பை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த வீட்டை ஒட்டியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தான் சித்தார்த்தன். 


அவனுக்கு குறையாத வேகத்துடன் விஷாலாக்க்ஷாவும் உடன் நடந்தாள். 


அக்கம் பக்கம் யாராவது தங்களை கண்காணிக்கிறார்களா எனப் பார்த்தபடி, செடி கொடிகள் நிறைந்த ஒரு சிறிய பாதையில் நடந்து, சிறிது தூரத்தில் தெரிந்த பத்துமாடி கட்டிட வளாகத்தினுள் இருந்த மின்தூக்கிக்குள் நுழைந்தார்கள். 


மின்தூக்கி வழியாக பத்தாவது மாடியை அடைந்து, வலது பக்கம் இருந்த முதல்  வீட்டிற்குள் புகுந்தார்கள். 


வீட்டினுள் இருந்து, "ம்ம்ம்… ம்ம்ம்ம்" என்ற முணங்கல் சத்தம் கேட்டது. 


வீட்டின் கதவை உள்ளிருந்து பூட்டிவிட்டு, படுக்கையறை கதவைத் திறந்தார்கள். 


அங்கு ஒரு சேரில் பாஸ்கர் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அவனது அருகில் சென்று வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை எடுத்துவிட்டான் சித்தார்த்தன். 


"ஏ போலீச்சு!!! எங்கள என்னன்னு நெனச்சுகன? அண்ணாத்தைக்கு விச்சியோம் தெரிஞ்சுச்சு, அம்புட்டு தா  உன்ன  ஹா... ஹாலி பண்ணிடும் தெர்மா?" என்று கத்தினான் பாஸ்கர்.


அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுவிட்டு, "உன் அண்ணாத்தயையே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் காலி பண்ணிட்டு வர்றேன். வாலு நீ இவ்வளவு சவுண்ட் விடுற? ரொம்ப சவுண்ட் விட்ட உன் அண்ணாத்தை போன இடத்துக்கு இப்பவே உன்னை அனுப்பி வைச்சிடுவேன்!!!" என்று இலகுவாக கூறினான் சித்தார்த்தன். 


"ஆ… அல்லா போலீச்சும் இப்படித்தான எங்ககிட்ட பேசிகினு விஷயத்தை வாங்க நினைப்பீங்கோ. நாங்க ரொம்ப உச்சார்மா" எனக் கூறிவிட்டு சத்தமாக சிரித்தான். 


தான் சொன்னதை நம்பாது முப்பத்திரண்டு பல்லையும் காட்டும் பாஸ்கரிடம், அருள் சடலத்தை வீடியோ எடுத்திருந்த காணொளியை தனது கைபோனிலிருந்து தேடி எடுத்து காட்டினான் சித்தார்த்தன். 


அதனைப் பார்த்துவிட்டு, அருள் இறந்துவிட்டானா என்று அதிர்ச்சியான பாஸ்கர், மெல்ல தன் கை, கால்கள் நடுக்கம் கொள்வதை உணர்ந்தான்.


"நான் கேட்கற கேள்விக்கு உன்மைய சொன்னா உன்ன விட்டுருவேன்.  பொய் சொல்லிருந்தன்னு தெரிஞ்சது மவனே எப்பனாலும், உன்ன நான் பார்க்கிற நொடி உனக்கு என்கவுண்டர் தான்!!!" என்று  கர்ஜித்தான் சித்தார்த்தன். 


அவனது கர்ஜனையில் அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்த பாஸ்கர் மேலும் அதிர்ச்சி அடைந்தான். 


அவர்களை கவனித்துக் கொண்டிருந்த விஷாலாக்க்ஷாவோ, 'சின்ன வயசுல அமைதியா சாந்தமா இருந்த சித்துவா இப்ப சிங்கம் போல கர்ஜிக்கறது. உன்னை இப்படி பார்க்க ரொம்ப அழகா தெரியுற டா. உன் மேல ஒவ்வொரு நாளும் எனக்கு லவ் கூட்டிட்டே போகுது சித்து' என்று, சித்தார்த்தனை காதலோடு நோக்கிக் கொண்டிருந்தாள். 


"எனக்கு தேவை உண்மை. உண்மைய சொல்லிட்டு உயிர்பிழைச்சுக்க. நா... நான் சொன்னா சொன்ன படி நடந்துக்குவேன். அநியாயமா என் துப்பாக்கி பழியாகிடாத!!!" என்று அவனிடம் பேரம் பேசினான் சித்தார்த்தன்.


"ச… சார் என்னை விட்டிருங்க சார்" என்று பயத்தில் எச்சில் விழுங்கினான் பாஸ்கர். 


"அருளை பத்தி சொல்லு???" என்று பாஸ்கரிடம் கேட்டுவிட்டு, விஷாலாக்க்ஷாயிடம் அவன் பேசுவதை காணொளியாக  எடுக்கும் படி பணித்தான். 


"எனக்கு அண்ணாத்த வியாபாரம் பத்தி ஒன்னும் தெரியாது சார்" எனக் கூறிவிட்டு, அவ்விருவரையும் பயத்துடன் நோக்கினான் பாஸ்கர். 


அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சித்தார்த்தனோ, அவன் பொய் சொல்கிறான் என யுகித்துவிட்டு, சட்டென்று  ஷூவிற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேகமாக அவனது விரல்களை வெட்ட ஆரம்பித்தான். 


அவனது அதிரடி செயலிலும் அவன் ஏற்படுத்தும் வலியிலும், "சார்… சார்" என்று அலறினான். 


"அருள் தொடையில போட்டுருக்கிற டாட்டூக்கு என்ன அர்த்தம்???" எனக் கேட்டபடி பாஸ்கர் விரலை கத்தியால் பதம் பார்க்க ஆரம்பித்தான் சித்தார்த்தன். 


"சார்!!! அத்து பத்தி மெய்யாலும் என்க்கு முழுச்சா தெரியாது. அ... அத்து வந்து கடத்துன கொல்ந்திங்கள வாங்குறவர்ரு இந்த டாட்டு தொடைல இருக்குதான்னு பார்த்துகன்னு தான் பணம் கொடுபாரு. ஏன்னா உங்கள மாதிரி போலீச்சு தொல்ல வந்துகினும்ன்னு ஒரு செட்டப்பு" என்று கத்தி கூறினான். 


அதனை கேட்டதும், பாஸ்கரின் விரல்களை பதம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, "ஏன்டா எல்லா அக்யூஸ்ட்டும் செய்ற தப்பை தடயம் இல்லாம செய்ய மாட்டிங்களா? இன்னும் கொஞ்சம் எங்களால உங்களை கண்டுபிடிக்க முடியாதளவுக்கு தப்பு பண்ணுங்கடா" என்றான் சித்தார்த்தன். 


அவனது பதிலில் இதழோரமாய் விஷாலாக்க்ஷா சிரிக்க, பாஸ்கரனோ, 'என்ன இவன் நல்லவனா கெட்டவனா?' என்பது போல மனதிற்குள் யோசித்தான். 


"குழந்தைய எப்ப எப்படி கடத்துவிங்க???"


"ரோட்ல தன்னியா வெளையாடிட்டு இருக்கிற கொல்ந்திங்க. கோயிலு, சர்ச்சு, கண்ணால மண்டபம் இப்டி கூட்டமா இருக்கற எடத்துக்கு வர்ற கொல்ந்திங்க. பணக்கார வுட்டு கொல்ந்திங்கனு பாத்து கடத்துவோம் சார். கடத்துறது ஒரு ஆள், பணம் வாங்கறது ஒரு ஆள் சார்" 


"ஓகே… பல லட்சம் கோடி பணத்தை எங்க வச்சிருக்கிங்க?" எனக் கேட்டபடி அவனது மற்றொரு விரலை பிடித்தான். 


'இந்த விரலையும் கத்தியால் கிழிப்பானோ' என்று மனதிற்குள் பயந்த பாஸ்கர், "சார்!!! அத்து என்க்கு தெர்யாது ஆனா பண்த்த பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் சிங்கம் தான்" என்றான் பம்மியமடி. 


"நீங்க செய்ற வேலைக்கு பின்னாடி அரசியல் கூறுக்கிடு இருக்கா???" 


"இதலாம் நம்ம கைல சொல்லிக்க மாட்டாங்க. சிங்கமும், அண்ணாத்தையும் தன்னியா போய்க்குவாங்க சார். நான் ஒன்னியும் அவ்வளவு பெர்ய ஆள் இல்ல சார். மூணு வேளை பிரியாணி கெடைக்கும். அப்பாலிக்கா செல்வுக்கு பணம் கெடைக்கும். அத்தான் சார் என் நெல்ம. என்ன வுட்டுரு சார்" என்று கெஞ்சி கேட்பது போல கேட்டான். 


"பரவாயில்ல உண்மைய சொல்லிட்ட" என்று அவளின் தோளில் இரண்டு தட்டு மெல்ல தட்டினான் சித்தார்த்தன். 


பாஸ்கரோ சிறிது பயத்துடன், "தங்க்ஸ் சார்!" என்று தன் கோரப் பற்கள் தெரியச் சிரித்தான்.


அவர்களை பார்த்துக் கொண்டிருந்த விஷாலாக்க்ஷா, சித்தார்த்தனின்  புன்னகை  சிந்தும் உதட்டை ரசித்துப் பார்த்தாள்.


அவள் புறம் சட்டென்று திரும்பிய சித்தார்த்தன், "விஷா!!! தம்பி நமக்கு ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்கான். அப்ப வேலைய ஸ்டார்ட் பண்ணுவோமா???" எனக் கேட்டான். 


அவனை காதலாக நோக்கி கொண்டிருந்தவள், சட்டென்று அந்த நினைவை தூக்கி போட்டுவிட்டு, சரி என்று வேகமாக தலையாட்டினாள். 


"இனி அருளோட அல்லக்கைகள அள்ளவே நமக்கு நேரம் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று வலது புருவத்தை உயர்த்தி, பாஸ்கரை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.


அவனோ… சித்தார்த்தனின் பார்வைக்கான அர்த்தம் என்னவென்று தெரியாமல் பயத்தில் முழித்தான். 


அவனது விரிந்து வளைந்த  புருவங்களை ரசித்துப் பார்த்தபடி, "சித்து... யார் யாரு அருளோட ஆட்கள்னு நாம எப்படி கண்டு பிடிக்கிறது. ஏன்னா, மத்த ரவுடீஸை அரட்ஸ்ட் பண்ணினா, நான் அவன் ஆளு இவன் ஆளுன்னு சப்போர்ட்க்கு யாரோடையாவது வருவாங்க" என்று சந்தேகம் கேட்டாள் விஷாலாக்ஷா.


"அதான் தம்பி இப்ப க்ளூ கொடுத்தானே… தொடையில டாட்டூ போட்டுருக்கிறவன்லாம் அருள் ஆளுனு, சொல்லப்போனா தம்பியே தொடைல ஒரு டாட்டூ போட்டுருக்கான்" என்று பாஸ்கரனை நோக்கினான் சித்தார்த்தன்.


"அய்யோ சார்… நான்ந்தா அப்ரூவரா மாற்ட்டனே! என்னைய விட்டுரு சார்!"


"விடுறேன் உன்னைக் கொண்டு போய் ஜெயில்குள்ள… அதுவும் நீ இப்படியொரு க்ளூ கொடுத்ததால தான். இல்லன்னா, நீயும் உன் அண்ணாத்தைய இந்நேரம் மீட் பண்ணிருப்ப மேலோகத்துல!" எனக் கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கத்தியை கழுவிட்டு வெளியில் வந்தான் சித்தார்த்தன். 


பாஸ்கரின் வாயை மறுபடியும் பிளாஸ்திரி கொண்டு ஒட்டிவிட்டு, அவனை பாதுக்காக ஒரு ஆளை நியமித்திவிட்டு இருவரும் ஜூப்பை அடைந்தார்கள்.


"விஷா!!! இன்னைக்கு நைட், அருளோட அத்தனை ஆட்களையும் அரஸ்ட் பண்ணனும். இல்லன்னா, அருளோட டெட்பாடி  ஊர்வலத்துல தேவையில்லாம பப்ளிக்க டிஸ்டர்ப் பண்ணுவான்க" எனக் கூறியபடி வாகனத்தை இயக்கினான் சித்தார்த்தன். 


"யு ஆர் ரைட் சித்து. நான் டிஜிபி சார் கிட்ட பர்மிஷன் வாங்கறேன். உடனே நாம டீம் பார்ம் பண்ணனும்" என்றாள்.


‘அன்று இரவு ஒவ்வொரு தெருவின் மூளை முடுக்கிலும், புதிதாக கத்தியை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தவர்களையும் விட்டு வைக்காது கைது செய்தார்கள். 


யார் தொடையில் அருள் போலப் பச்சை குத்தியிருந்தார்களோ, அவர்கள் அனைவருக்கும், சிறப்பான முறையில் விசாரணை நடத்தப்பட்டது. 


அந்தக் கூட்டத்தில் இனி யாராவது குழந்தைகளை கடத்தி விற்க முயல்வது விசாரணையில் தெரிய வந்தால், நேரிடையாக நெஞ்சில் குண்டு தான் பாயும்’ என்று எச்சரிக்கை கொடுத்தார்கள்.


அருளின் இறுதி ஊர்வலத்தில், எந்த வித கலகமும் வரக் கூடாது. மேலும், அவனின் சடலத்தை வைத்து அரசியலும் பண்ணக் கூடாது என்று, அருள் மனைவியின் தமையனான சிங்கம் ஜாமீனில் இருந்து வெளி வருவதைத் தடுத்தான் சித்தார்த்தன்.


வெளியூர்களில் இருந்து சந்தேகபடுகிற மாதிரி நபர்கள் யாரேனும் சென்னைக்குள் நுழைவரை தடுத்தான். 


விமானநிலையம், ரயில்நிலையம், பஸ்நிலையம் என்று எல்லா இடங்களிலும் பாதுக்காப்பை பலப்படுத்தினான். 


அன்றைய நாள் சாப்பாடு, தூக்கமின்றி வேலையில் மும்முரமாக ஈடுபட்டான் சித்தார்த்தன். 


சோர்வடையாது, துவண்டு போகாது தொடர்ந்து வேலையில்  ஈடுபடுவனை கண்டுவிட்டு, மனதிற்குள்  வியந்த விஷாலாக்க்ஷா, "சித்து!!! உன்னை மாதிரி ரொம்ப சின்சியரான ஆபிஸரை இதுவரை  நான் பார்த்தில்ல. கொஞ்ச நேரமாச்சும் ரெஸ்ட் எடு சித்து" என்று அக்கறையாக கூறினாள். 


"நான் என்னைக்கு ரெஸ்ட் எடுத்தேன்" என்று இலகுவாக கூறிவிட்டான் சித்தார்த்தன். 


மனம் கேட்காது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஆட்களின் மூலம் பழச்சாறு வாங்கி, அவனை பருக வைத்தாள் சித்தார்த்தன்.

***

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 6

 அத்தியாயம் : 6


தன்னைத் தேடி விகரம் வந்துவிட்டான் என்று நினைத்து பார்த்து சந்தோஷம் அடைந்த ஐஸ்வர்யா, சிறிது பதட்டத்துடனும், நம்ப முடியாத நிலையிலும், "எ.. என்ன சொல்றிங்க? உண்மையைத்தான் சொல்றிங்களா" என்று அவனிடம் தயங்கியபடி கேட்டாள். 


"ஜில்லு!!!! நிஜமா நான் இப்ப உங்க காலேஜ் வெளிய தான் நிக்கிறேன். உங்க காலேஜ் லோகால சுயஒழுக்கம், தனி உரிமை கொள்கை, சர சர... சார" எனக் கல்லூரியின் சுவற்றில் தமிழில் எழுதியிருந்ததை வாசிக்க  திணறினான். 


அவன் சொல்லும் விடயம் உண்மையாக இருக்கவும், "ஓகே... ஒகே இரு.... இருங்க நான் வர்றேன்" என்று அழைப்பை துண்டித்தவள், தோழிகளை கேள்வியுடன் நோக்கினாள் ஐஸ்வர்யா.


"என்ன? எங்களை ஏன் பார்க்கற? போய் உன் ஆளைப் பார்த்திட்டு வாடி" என்றாள் லஷ்மீகா.


"இல்லடி!!! நீங்களும் கூட வாங்க. நான் என்னைக்கு நீங்க இல்லாம எங்கேயும் போயிருக்கேன். என் பேரண்ட்ஸ விட, உங்க கூடத் தான் அதிகமா வெளிய சுத்துவேன். உங்க கூடத்தான் அதிகம் நேரம் இருக்கேன். எனக்கு... எல்லாமே நீங்க தான?" என்று அனைவரிடமும் காலில் விழுகாத குறையாக பேசினாள். 


"ஹே... இப்ப இப்படி தான்டி சொல்லுவ. ஆனா, நாளைப் பின்ன உன் ஆளு கூடத் தான் நீ சுத்துவ. எங்களையெல்லாம் நீ மறந்தாலும் மறந்திடுவ. நாங்க உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கோம்" என்றாள் தீவிதா.


"நோ நோ நோ எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் தான் முதல்ல. அடுத்து தான் ஹஸ்பெண்ட் சைல்டு எல்லாமே... ஸோ வாங்கடி" என்று ஒவ்வொருவரின் கைப்பிடித்து எழ வைத்தாள் ஐஸ்வர்யா.


அவளுக்காக பாவம் தோழி என்ற பாசத்துடன் அனைவரும் அவளுடன் வெளியில் சென்றனர். 


விக்ரம்... தனது நான்கு சக்கர வாகனத்தின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நின்றிருந்தான். 


கண்களுக்கு கருப்பு கலர் கண்ணாடி அணிந்து... இறுக்கிப் பிடித்த கருப்பு கலர் சட்டையுடன் பார்க்க, ஒரு சினிமா நடிகரைப் போலக் காட்சிக் கொடுத்தான்.


"ஐஸ்... உன் ஆளு சூப்பர்டி" என்றாள் தீவிதா.


"அது மட்டுமல்ல இப்பவே உன் மேல இவ்வளவு லவ்வா இருக்கான்" என்றாள் தர்ஷா. 


அனைவரும் ஐஸ்வர்யாவிடம் கிசுகிசுத்தபடி, அவனருகில் சென்றார்கள்.


"ஹாய்" என்று ஐந்து பேரையும் பார்த்துக் கை அசைத்தான் விக்ரம்.


"ஹாய் ப்ரோ நைஸ் டு மீட் யு" என்று பொதுப்படையாகக் கூறினாள் லஷ்மீகா.


அவளிடம் சன்னமாக தலையை ஆட்டியவன் மறுநொடி கண்ணாடியைக் கழற்றிய படி, "என்ன மேடம்!!! நான் என்ன உங்களை கடத்திட்டா போயிடப் போறேன்? துணைக்கு உங்க ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு வந்திருக்கிங்க?" என்று ஐஸ்வர்யாவை பார்த்த படி, சிரித்த முகமாக கேட்டான் விக்ரம்.


"ஆமா ப்ரோ.... ஐஸ்கிரீம் சிலைபோல இருக்கிற எங்க ஐஸ்வர்யாவை நீங்க மட்டுமில்ல, சான்ஸ் கிடைச்சா யாருன்னாலும் கடத்திட்டு போனாலும் போயிடுவாங்க. அதனால, நாங்க படை வீரர்கள் போலக் கூடவே வந்திருக்கோம்" எனச் சிரித்த படி ஐஸ்வர்யாவிற்கு பதிலாக தர்ஷா பதில் கூறினாள்.


விக்ரமோ, "நானும் இந்த ஐஸ்கிரீம் சிலையை... சீக்கிரம் என் வீட்டுக்கு கடத்திட்டுப் போலான்னு தான்  நினைக்கறேன் சிஸ்டர்" என்றான். அவனது பார்வை ஐஸ்வர்யாவிடமே நிலைத்திருந்தது. 


அதனை அறிந்த தீவிதா, தலைகுனிந்த படி நின்றிருந்த ஐஸ்வர்யாவின் முகவாயை பிடித்து நிமிர்த்தி, "ஹே ஐஸ்!!! உன்னைப் பொண்ணு பார்க்கும் படலம் இங்க நடந்திட்டு இருக்கு. இதோ மாப்பிள்ளை வந்திருக்காங்க. எங்களுக்கெல்லாம் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்த்துச் சொல்லு?" என்று அமைதியின் சொரூபமாய் மாறிப் போய் நிற்கும் ஐஸ்வர்யாவை கேலி செய்தாள்.


ஐஸ்வர்யாவை தவிர ஏன் விக்ரமே அவளது கேலி பேச்சில் சிரித்துவிட, "ஹே சும்மா இருடி" என்று தோழியை அதட்டினாள்.


"ஓகே.... ஓகே... நான் கிளம்புறேன். ஜில்லுனு அழைக்க ஜி…” என்று வார்த்தையை விட்டவன், மற்றவர்கள் இருப்பதால், ஐஸ்வர்யா என்று மாற்றினான். அதனை தோழிகள் கவனித்தனர். ஆனால் அவனிடம் அவனது ஜில்லு என்ற அழைப்பை பற்றி காட்டி கொள்ளவில்லை. 


“ஈவினிங் எத்தனை மணிக்கு உன்னை பிக்அப் பண்ண வரணும்னு எனக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பு" என்றான்.


"நா... நான் ஸ்கூட்டியில வந்திருக்கேன்" எனத் தயங்கிய படி  கூறினாள் ஐஸ்வர்யா. 


"அதுனால என்ன? என் ட்ரைவரை உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வரச் சொல்வோம். தட்ஸ் ஆல்” என்று தோளைக் குலுக்கினான். 


ஐஸ்வர்யாவோ யோசித்தவாறு இருக்க... 


“பை... சிஸ்டர்ஸ் பை" என்று அனைவரிடமும் கையை ஆட்டிவிட்டு  வாகனத்தினுள் அமர்ந்தான். உடனே வாகனம் நகர்ந்தது.


"ஹே பார்க்க நல்லா இருக்கான். நல்லா பேசறான். குயிக்கா ப்ராப்ளத்தை சால்வ் பண்றான். நல்ல பிஸ்னஸ் ஃபீல்டில் இருக்கான். ஸோ... வீட்டுக்குப் போனதும், உன் மம்மி, டாடிகிட்ட ஆர்க்யூ பண்ணாம, மேரேஜிற்கு எஸ் சொல்லிடு. அது தான் உன் ப்யூச்சருக்கு நல்லது"  அறிவுரை வழங்கினாள் லஷ்மீகா.


அனைவரின் நேர்மறையான வார்த்தையில் ஒரு கணம் விக்ரமை தனது மணக்கண்ணில் நினைத்து பார்த்துவிட்டு, "எனக்கும் அவனை முதல்ல பிடிக்கல. ஆனா இப்ப பிடிச்சிருக்கு" என்று மெல்லிய வெட்க புன்னகையுடன் கூறினாள் ஐஸ்வர்யா. 


உடனே அவனைவரும் அவளை கேலி செய்யும் விதமாக 'ஓஹோ' என்று ஒன்றாக கத்தினார்கள். 


"நம்ம க்ரூப்ல இலியா, ஐஸூக்கு அவங்க ஆசைப்பட்ட மாதிரி ஹஸ்பெண்ட் அமைஞ்சிடுச்சு. நமக்கு எப்படி வாய்க்கப் போதோ? ஆனா பயமாவும், கொஞ்சம் ஈகராவும் தான் இருக்கு" எனச் சொல்லி சிரித்தாள் தர்ஷா.


"ஹே அலையாதடி" என்று தீவிதா அவளை கிண்டல் செய்யவும்,


"லஷ்மீக்கு எப்படிப்பட்ட ஹஸ்பெண்ட் வரணும்னு அவ இன்னும் சொல்லவேயில்லையே?" என்று யோசித்துக் கொண்டிருந்த லஷ்மீகாவை கைக்காட்டினாள் இலியா.


"அவளுக்கு அவங்க டாடி ஃபாரின் மாப்பிள்ளையை தான் பார்ப்பார்னு நினைக்கறேன்" என்று ஒரு யூகத்தின் பேரில் கூறினாள் தீவிதா.


"ஆமாடி!!! சிங்கப்பூர்ல தான், ஒரு மாப்பிள்ளை இருக்கிறதா லாஸ்ட் டைம் வீட்ல பேசிக்கிட்டாங்க. ஆனா…" என்றவள் அத்தோடு பேச்சை நிறுத்திட்டு அனைவரையும் யோசனையுடன் பாரத்தாள். தன் மனதில் உள்ளதை அவர்களிடம் சொல்வோமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 


"ஆனா... உனக்கு எங்களையெல்லாம் விட்டுப் போக மனசில்ல. அப்படித் தான?" எனக்  கேட்டாள் ஐஸ்வர்யா. 


அதற்கு லஷ்மீகா பதில் சொல்வதற்குள்,


"ஹே விடாது கருப்பு உன்னை பின் தொடர்றது போல, இலியா அங்க தானடி மேரேஜ் ஆனதும் செட்டில் ஆகப் போறா, அப்புறம் என்ன? அவ கூட நல்லா என்ஜாய் பண்ணு" என்று நினைவு வந்தவளாக கூறினாள் தீவிதா. 


உடனே செல்லமாக அவளது கன்னதை கிள்ளினாள் இலியா.


"நான் அப்ராடு எல்லாம் போகமாட்டேன்ப்பா. இங்க... நம்ம கன்ட்ரீல எந்த ஸ்டேட்னாலும் பரவாயில்ல. வெல் டேலண்ட்டான ஒரு போலீஸ் ஆபிஸரை தான் மேரேஜ் பண்ண நினைக்கறேன்" என்று, அவ்வேளையில் தோழிகளிடம் மனம் திறந்தாள் லஷ்மீகா.


அதனை சற்றும் எதிர்பாராத தோழிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.


"என் ஹஸ்பெண்ட் ஒரு கன்னியமான, நேர்மையான, டேலண்ட்டான போலீஸ் ஆபிஸிர்னு சொல்லிக்க நான் பெருமைபடணும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.


"ஹே நீ யாரைக் கட்டிக்க நினைக்கிற தெரியுமா?" என்று அதிர்ச்சியாக இலியா கேட்கவும்,


சிறிதும் யோசிக்காமல், "போலீஸ் ஆபிஸரை" எனச் சந்தோஷமாக கூறினாள் லஷ்மீகா.


அவளின் சந்தோஷம் அனைவருக்கும் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. 


"போலீஸ் ஜாப்ல உள்ள மாப்பிள்ளையா?" என்று தர்ஷா வாயை பிளக்கவும்,


"ஏன்... ஏன் போலீஸ் ஜாப்க்கு என்ன? அந்த ஜாப் தான் ரொம்ப ரெஸ்பெக்டபில் ஜாப். என்னடி ஐஸ்?" என்று, அவளை துணைக்கு அழைத்தாள் லஷ்மீகா. 


ஏனெனில் லஷ்மீகாவிற்கு ஐஸ்வர்யா என்றும் துணை நிற்பாள். ஆனால் அவளோ... அமைதியாக லஷ்மீகா சொன்னதை பற்றி யோசித்தாள். 


"அந்த ஜாப் நல்ல ஜாப் தான் இல்லங்கல்ல. ஆனா அன்னைக்கு  பார்த்தோம்ல, அந்த படம் மாதிரி உன் லைஃப் ஆகிடாமடி" எனக் கவலையுடன் கூறினாள் தீவிதா.


"ஹே ஹே... அப்ப போலீஸ் ஜாப்ல உள்ளவங்க கல்யாணமே பண்ணிக்க முடியாதா?" எனக்  கோபப்பட்டாள் லஷ்மீகா.


"லஷ்மீ!!! நான் அப்படி சொல்ல வரல?"


"தீவி... அவங்களும் நம்மளை மாதிரி ஒரு நார்மல் பெர்சன் தான். அவங்க மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா, அவங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி, ட்யூட்டி டைம், இதெல்லாம் மத்த ஜாப் காட்டிலும் அதிகம். 


எனக்கு அன்னைக்கு படம் பார்த்தோம்ல ரேயன், அப்படியொரு பெர்சன் தான் ஹஸ்பண்ட்டா வேணும். எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்கணும். அந்த இதயத்துக்குள்ள நான் எப்பவும் இருக்கணும்" என்று இனம் புரியாத ஒரு சந்தோஷத்துடன் கூறினாள்.


ஐஸ்வர்யாவோ, "லஷ்மீ... ஒரு முடிவெடுத்திட்டா அதுல இருந்து எப்பவும் மாறமாட்டா. ஸோ... அவளோட விருப்பத்தை நாமளும் ஏத்துக்கணும். நம்ம க்ரூப்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீல்டுல இருக்கிற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா, நமக்குத் தான நல்லது. 


லஷ்மீ... ஹஸ்பெண்ட் ஒரு போலீஸ் ஆபிஸர்ன்னு சொல்லிக்க, நமக்கும் பெருமையா இருக்கும். எனி ஹெல்ப்னாலும் ஆபிஸர் கிட்ட கேட்டுக்கலாம்" என்று, மற்ற தோழிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு கூறினாள்.


"ஆனாலும்"


"ஹே நீயா மேரேஜ் பண்ணிக்க போற? என்ன ஆனாலும் உனாலும்ங்கிற" என்று நேரிடையாக தோழியிடம் எடுத்தெறிந்து சட்டென்று பேசிவிட்டாள் லஷ்மீகா.


அதனால் அனைவரும் அமைதியாகி விட்டனர்.


அவர்களின் மெளனம் லஷ்மீகாவை வருத்தமடைய செய்யவும், "நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியுது. ஆனா, இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோன்னு எடுத்த எடுப்பிலேயே என்னைய பயமுறுத்தாதிங்கடி. நம்ம வாழ்க்கைய நாம தான் வாழ்ந்து தான் பார்க்கணும். ஒதிங்கிப் போய்யிடக் கூடாது. நேசிச்சிட்டே வாழணும். யோசிச்சிட்டே இருக்கக் கூடாது. ஏன்னா ஒரே ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில என்ன ஆனாலும் வாழ்க்கைய லவ் பண்ணிட்டே வாழணும்" என்று உணர்வுப்பூர்வமாகக் கூறி முடித்தாள் லஷ்மீகா.


அவளின் உருக்கமான பேச்சில், அனைவரின் உள்ளமும் நெகிழ்ந்து விட, "ஹே லஷ்மீ.... நீ விரும்புற மாதிரியே, ஒரு வெல் டேலண்ட்டான போலீஸ் ஆபிஸர், கண்டிப்பா உனக்கு ஹஸ்பெண்ட்டா கிடைப்பாங்க. டோண்ட் பீல் ஹாங்..." என்றாள் இறுதியாக தீவிதா.


அவளை போல மற்றவர்களும் கூறவும், தோழிகள் ஆதரவு கிடைக்க பெற்றதை நினைத்து மனதிற்குள் சந்தோஷம் அடைந்தாள். 


சீக்கிரம் அவனை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை மனதிற்குள் பிறக்க, தன் மனதை கொள்ளை கொண்ட அந்த காவலனை பற்றி  எப்படி கண்டுப்பிடிப்பது என்று தோழிகளிடம் அபிப்பிராயம் கேட்கலாம் என முடிவெடுத்தாள். 


***



அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 7

 அத்தியாயம் : 7


கடந்த ஒரு மாத காலமாக தன் கண்களின் வழியே தன்னிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும், தன் மனதை ஈர்த்த காவலனை பற்றி அனைவரிடமும்  கூறினாள் லஷ்மீகா.


அதனைக் கேட்டுவிட்டு அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வியாய் பார்த்து கொண்டனர். 


"லஷ்மீ!!! நான் சொல்றனேன்னு கோ... கோபப்படாதடி. இதெல்லாம் உன் கற்பனை தான்" என்று தனிவான குரலில் கூறினாள் இலியா.


அவளைப் பார்த்தபடி கசந்த புன்னகை சிந்தியவள், "நானும் இது கற்பனையாகிட கூடாதுன்னு தான், இப்ப களத்துல இறங்கி தேடவே ஆரம்பிச்சிட்டேன். என் ஆழ் மனசு சொல்லுது. சீக்கிரம் அவனை நான் மீட் பண்ணிடுவேன்னு"


"உன... உனக்குத் தெரிஞ்ச சிம்டம்ஸை வச்சு, அப்படி ஒருத்தன் இருக்கானான்னு கண்டுபிடிக்க முடியுமான்னு தெரில? ஆனா... உன் ஆழ் மனசு சொல்ற படி, அப்படி ஒருத்தன் இருந்தா, கண்டிப்பா உன்னை விடச் சந்தோஷப்படுறவங்க, நாங்களா தான்டி இருப்போம்" என்று சந்தேஷமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஹே... முதல்ல போலீஸ் ஜாப்ல இருக்கிறவங்களை கூகுள்ள சர்ச் பண்ணிப் பார்ப்போம். அதுல உன் கனவுல வந்த ஆபிஸர் இருக்கிறானான்னு பார்ப்போமா?" எனக் கூறியபடி தன்னுடைய கைப்போனை எடுத்தாள் தர்ஷா. 


"நானும் எனக்குத் தெரிஞ்ச வரை நல்லா சர்ச் பண்ணி பார்த்துட்டேன். அவன் போல யாருமில்ல. ஆனா, அவன் முகம் மட்டும் எனக்குத் தெரிஞ்சவுடனே, அவன் முன்னாடி போய் நிற்பேன்டி" என்றாள் ஆணித்தரமாக... 


"எப்படி உன் கண்ணுக்குள்ள இருக்கிறவனை கண்டுபிடிச்சி நீ.... கல்யாணம் பண்ணிக்கப் போற? எனக்கு உன் பைத்தியகாரத்தனமான முடிவை நினைச்சு கவலையா இருக்குடி" என்றாள் இலியா.


"அவன் ஹைட் ஆறடி, போலீஸ் கட் ஹேர் ஸ்டைல், பிஸ்கட் கலர், முஸ்டாச், பிளாட்டினம் பிரேஸ்லெட் இதலாம் வச்சு அவனை கண்டுப்பிடிக்க முடியாதா?" என்று பைத்தியம் போல லஷ்மீகா கேட்கவும், 


"இதெல்லாம் பொதுவான விஷயம். வேற ஏதாவது தெரிஞ்சா சொல்லுடி?" என்று கோபப்பட்டாள் இலியா.


எப்பவும் வாய் பேசாமல் அமைதியாக இருக்கும் இலியா இன்று தன்னை திட்டிக் கொண்டே இருக்கவும், அவளை முறைத்துப் பார்த்தபடி, "இந்த விஷயத்தை வச்சு தான், நானே தேடிட்டு இருக்கேன். அப்ப கண்டுப்பிடிக்க முடியாதாடி?" என்று சோகமாக ஐஸ்வர்யாவை பார்த்தாள். 


"லஷ்மீ!!! நான் மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் உன் கற்பனை தான்டி" பக்குவமாக அவளுக்கு எடுத்துச் சொல்ல புரிய வைக்க நினைத்தாள் இலியா.


"இது என்னுடைய கற்பனை தான்னு எனக்குப் புரியுதுடி. பட் என் கற்பனையில பார்த்த போலீஸ் ஆபிஸர் மாதிரி ஹைட், வெயிட், கலர்னு நிஜத்துல யாராவது இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கேன். 


ரீல்ல உள்ள பெர்சன் மாதிரி ரியல்லையும் இருப்பாங்கன்னு நீங்க தான அன்னைக்குச் சொன்னீங்க? அந்த மாதிரி கேரக்டரை தான் நான் விரும்புறேன். 


இல்லன்னா வெல் லேண்ட்டான போலீஸ் ஆபிசர் லிஸ்ட்டை கண்டுபிடிச்சி அவனை தேடுவோமா? எனக்கு அப்படி ஒரு போலீஸ் ஆபிசர் தான்டி வேணும். மத்த தத்தி ஆபிஸர் எனக்கு வேணா" என்றாள்.


"சினிமாவுல ஏற்கனவே நடந்ததையோ, இல்ல நடந்துகிட்டு இருக்கிறதையோ, ஏன் நடக்கப் போறதையோ தான் காட்டுறாங்க. அதுல நிஐமும் இருக்கும் பொய்யும் இருக்கும்டி. 


நாங்கலாம் எங்க ஹஸ்பெண்ட் ஃபேமிலின்னு இருக்கிறப்ப, உனக்கோ இல்ல உன் ஃலைப்பிற்கோ சடர்னா ஏதாவது ஆகிடுச்சுன்னா... எங்களால தாங்கவே முடியாது. 


ஏன்னா... நாம அஞ்சு பேரும் யூ.கே.ஜில இருந்து இப்ப வரைக்கும் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். ஃலைப் லாங்கா ஃப்ரெண்ட்ஸாவும் இருப்போம். நாமலாம் ஜாலியா எப்பவும் சந்தோஷமா இருக்கனும்டி. கொஞ்சம் யோசிடி" என்றாள் மனம் கேட்காமல் இலியா.


"ஒரு படத்துல ஹீரோயின் இறந்து போற மாதிரி காட்டுவாங்க. வேறொரு படத்துல ஹீரோ இறந்து போற மாதிரி காட்டுவாங்க. ஏன், நாம பொறக்கும் போதே இறக்க தயராகிடுறோம். டெத்ங்கிறது என்னைக்கு எப்ப... எப்படின்னு தான் நமக்குத் தெரியாதுடி. எப்பவும் நல்லதையே யோசி" எனக் கூறிய லஷ்மீகா… தன் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முயற்சிக்கவில்லை. 


"ஏன்டி நாமெல்லாம் எம்பிஏ தான பிடிச்சிட்டு இருக்கோம்? ஆனா, லஷ்மீ என்னென்னா… சைக்காட்ரிஸ்ட் மாதிரி பேசறா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் தீவிதா.


"ஹே... நான் பொதுவான விஷயத்தை தான் சொல்றேன்டி. இந்த உலகத்துல முதல்ல எல்லா விஷயத்தையும் கற்பனை தான் பண்ணாங்க. அடுத்து தான், அது கைவண்ணமாச்சு. கற்பனை பண்றதுல தப்பில்ல. கற்பனை நல்ல கருவா இருக்கனும். அடுத்து அது கனவா மாறனும். அப்துல்கலாம் சார் சொன்ன மாதிரி, நாம என்னவா ஆகணும்னு நினைக்கிறோமோ... அதுக்கான கனவை காணனும். 


சின்ன வயசில இருந்தே கற்பனை பண்ணலையா... நாம ஒரு டாக்டர் ஆகணும், ஒரு இன்ஜினியர் ஆகணும் அப்படி இப்படினு. அது மாதிரி தான் இந்த கற்பனையும்... 


என்னுடைய மனசை பாதிச்ச அந்த படத்துல இருந்து தான், எனக்குக் கற்பனை உருவாச்சு. அது கனவா மாறிச்சு. இப்ப... ஒரு நல்ல போலீஸ் ஆபிஸருக்கு மனைவியா ஆகணுங்கிற லட்சியமாகிடுச்சு"


"எப்படி? அவனக் கண்டு பிடிச்சிடலாமா?" என்று  லஷ்மீகாவிற்காக மற்றவர்களிடம்  கேட்டாள் ஐஸ்வர்யா.


"டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா, வெல் டேலண்ட்டான, லஞ்சம் வாங்காத, கெட்ட பழக்கமில்லாத முக்கியமா மேரேஜ் ஆகாத போலீஸ் ஆபிஸர்ஸோட லிஸ்ட் கேட்டு வாங்கலாம் வித் பயோட்டாவோட. ஆனா பேமண்ட் எவ்வளவு கேட்பாங்கன்னு தெரியல?" என்றாள் தீவிதா.


"லஷ்மீ!!! என் மச்சான் ஒருத்தர் ப்ரைவெட் டிடெக்டிவ்வா இருக்கார்டி. அவர் கிட்ட நான் கேட்டுப் பார்க்கவா? ஐஸ்வர்யா சொல்லவும் தான், எனக்கும் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது" என்றாள் சந்தோஷமாக தர்ஷா.


"ஓகேடி... அவர் என்னுடைய கேஸை எடுத்துப்பாரானு கேட்டுட்டு, அப்படியே பேமண்ட் பத்தியும் கேட்டுச் சொல்லுடி. டாடி கிட்ட அமெளண்ட் கேட்க முடியாது. அட் த சேம் டைம் பவனுக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது. நீங்க யாரும் அவன் என் கூட இருக்கும் போது, என் ட்ரீம் பாய் பத்தி பேசிடாதிங்க" என்று அனைவரையும் முன் கூட்டியே எச்சரித்தாள் லஷ்மீகா.


"ஓகே!!! அவர் கிட்ட உடனே கேட்கறேன்" என்று தன்னுடைய கைப்போனை எடுத்து விபரத்தை அந்நபரிடம் தெரிவித்தவள், பேசி முடித்துவிட்டு லஷ்மீகாவை சோகமாகப் பார்த்தாள்.


தர்ஷாவின் உதட்டில் இருந்து உதிர போகும் வார்த்தைக்காக தவம் கிடப்பவள் போலத் தவிப்புடன் அவளது முகத்தை நோக்கிய படி இருந்தாள், லஷ்மீகா. 


“ஒன்லாக்ஸ் பேமண்ட் ஆகுமாம்டி" 


"ஒன் லாக்ஸா?" என்று அனைவரும் வாயைப் பிளந்தார்கள்.


"ம்ம்ம்... ஆளுக்கு டொண்டி தவுசண்ட் போட்டா கரைட்டா இருக்கும்ல?"  உடனே ஐஸ்வர்யா சொல்லவும்,


"ஆமாடி!!! நான் நாளைக்கு அமெளண்ட் தர்றேன்" என்று தர்ஷா பதில் கூறவும், அனைவரும் அதே போல் கூறினார்கள்.


யோசித்த வண்ணமிருந்த லஷ்மீகாவோ, "இல்லடி இருக்கட்டும். இன்னும் சிக்ஸ் மன்த்ல ஜாப்க்கு போயிட்டு சொல்றேன். அப்போ ட்ரை பண்ணலாம். அதுவரைக்கும் நாம தேடுவோம். எனக்கு நம்பிக்கை இருக்கு, அவனை சீக்கிரம் நான் கண்டுபிடிச்சிடுவேன்" என்று உறுதியாகக் கூறினாள் லஷ்மீகா.


"எஸ்... இன்னும் சிக்ஸ் மன்த்குள்ள நாம ப்ராஜெக்ட் முடிக்கணும். கேம்பஸ் இன்டர்வியூக்கு ட்ரை பண்ணனும். அதுக்கு அப்புறம் நம்முடைய ட்ரீம்ஸ்லாம் கன்டினியூ பண்ணுவோம். அதுவரைக்கும் நோ சினிமா, நோ அவுட்டிங். ஆனா, லஷ்மீ சொன்ன படி போலீஸ் ஆபிஸரை யாராவது பார்த்தா, உடனே அவங்களை போட்டோ பிடிச்சு லஷ்மீ கிட்ட காட்டுவோம். அவளே அவளுடைய ஃலைப் பாட்னரை செலக்ட் பண்ணிக்கிடட்டும்" என்று நல்ல அறிவுரை கூறினாள் இலியா.


"ஓகே" என்று அனைவரும் ஒட்டு மொத்தமாக உடன் பட்டார்கள்.


"இன்னைக்கு இலியா அநியாயத்துக்கு அறிவாளியா பேசறாள்ல!!!" என்று அவளை கேலி செய்தாள் ஐஸ்வர்யா. 


அன்றிலிருந்து ஒவ்வொருவரும் எந்த போலீஸ் ஆபிஸரையாவது எதார்த்தமாகப் பார்க்க நேர்ந்தால், உடனே அவரை  புகைப்படம் எடுத்து, அதனை லஷ்மீகாவிற்கு அனுப்பினார்கள்.

 

ஒவ்வொரு தடவையும் தன் மனம் கவர்ந்த நாயகனாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் ஆசையுடன் தோழிகள் அனுப்பும் புகைப்படத்தைப் பார்த்தாள். ஆனால், ஒருவர் கூட அவளது ஆசை நாயகனின் கால் தூசிற்கு கூடத் தேராதவர்களாக இருந்தனர். 


அந்த வாரம் பரீட்சை ஆரம்பமானது. அது முடிந்து திட்டபணி ஒப்படைவு செய்வதற்கான நாள் வந்தது. 


அதனை முடித்துவிட்டு அனைவரும் மூச்சுவிடுவதற்குள் 

நேர்முகத்தேர்வு நடைபெற ஆரம்பித்தது. 


ஒவ்வொரு தொழில்ஸ்தாபனமாக நேர்முகத்தேர்வு நடத்த ஆரம்பிக்கவும், அதில் தாங்கள் அனைவருக்கும் ஒன்றாக வேலை கிடைக்கும்படியான ஸ்தாபனமாக பார்த்து தோழிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். 


அவர்கள் முயற்சியின் படி எதிர்பாராவிதமாக அனைவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. 


அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி, மேலும் பரீட்சை, படிப்பு என எல்லாம் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிம்மதியாக வெளியில் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள்.

 

அன்று… தமையனுக்கு பள்ளி விடுமுறை என்று அவனையும் உடன் அழைத்து, தோழிகள் வரச் சொல்லியிருந்த பல்கடை அங்காடிக்கு விரைந்தாள் லஷ்மீகா.

 

அனைவரும் வந்தவுடன், ஆறு மாடி பல்கடை அங்காடிக்குள் நுழைந்து,   தங்களுக்கு வேண்டியதை, ஒருவருடன் ஒருவராக பேசிய படி தேர்வு செய்து முடித்தனர். அதற்கேற்ப நேரமும் விரைந்து சென்று கொண்டிருந்தது.

 

அதனால் மதிய உணவை கூட அங்கேயே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, எந்தப் படத்தை பார்க்கலாம் என்று அவர்களுக்குள் கலந்துரையாடல் ஆரம்பமானது. 


சிங்கம் படத்திற்குப் போகலாம் எனக் கூறினாள் லஷ்மீகா.


"ஹே!!! என்னப்பா போலீஸ் கான்செப்ட் இருக்கிற மூவியா சொல்ற? நீ பேசாம போலீஸாகிடு. அப்பத்தான் உன் ட்ரீம் பாய்யை சீக்கிரம் உன்னால கண்டு பிடிக்க முடியும்” என்று இலியா சொல்லிக் கொண்டிருக்க… 


பவனுக்குத் தெரியாமல் இலியாவிற்கு கை சைகையால், 'பவன் இருக்கிறான் பேசாத' என்று அறிவுறுத்தினாள் லஷ்மீகா. 

 

"அப்ப ஹாரர் படம் வேணா பார்ப்போமா?" என்று இலியாவை கேலியாக பார்த்தாள் தர்ஷா.


"ஹாங் வேணாடி. நைட்டு எனக்குத் தூக்கம் வராது" என்று இலியா கண்களை விழிக்கவும்,

 

"பயந்தாங்குளி" என்று அவளை சடைத்தாள் தீவிதா.


அச்சமயம் பல்கடை அங்காடிக்குள் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரும் கண்ணாடி ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்தனர்.


முதலில் இலியா எழுந்து சென்று  எட்டிப் பார்த்தாள். கீழே காவல் துறையில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். "ஹே லஷ்மீ!!!  இன்னைக்கு உனக்கு ஜாக்பாட் தான்டி. இங்க வந்து பாரேன், எத்தனை போலீஸ்னு?" என்று அழைத்தாள்.

 

"ஏன் போலீஸ் போர்ஸ் வந்திருக்காங்க?" என்று தீவிதா  சொல்லவும், மற்றவர்களும் வந்து எட்டிப் பார்த்தனர்.


லஷ்மீகாவோ ஆர்வமாய் பார்த்தாள். 


"டைம் வேற ஒன் பார்ட்டி ஆகப் போகுது. இப்ப கிளம்பினா தான் படம் போடுறதுக்குள்ள நாம தியேட்டர்குள்ள போக முடியும். இவங்களை கடந்து எப்படி நாம போறது. ஓ.... காட்! இன்னைக்கு நாம படம் பார்க்க முடியாதா?" என்று சோகமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.

 

அவளது கைப்பிடித்து அசைத்து, "ஐஸ் சிஸ்டர், வாங்க நாம படத்துக்கு போவோம். இவங்க வந்தா வரட்டும்" என்றான் பவன்.

 

அவனுக்கு வலிக்காத மாதிரி அவனது தலையில் ஒரு கொட்டு கொட்டிய தர்ஷா, "உனக்கெல்லாம் படம் பார்க்கிற வயசாடா? ஆனா படம் பார்த்துட்டு வீட்டுக்கு போய் லஷ்மீயை மட்டும் நல்லபிள்ளை மாதிரி உன் டாடி கிட்ட போட்டுக் கொடுத்திடு. என்ன?" 


"ஓகே சிஸ்டர்" என்றான் பவன்.


"ஹாங்… சரின்னு சொல்றான் லஷ்மீ. சொன்னதை செஞ்சிடுவானோ?" என்று லஷ்மீகாவை பார்த்தாள் தீவிதா. 

 

"எஸ் சொன்னதை செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்.   டாடி கிட்ட நீங்க சொல்லச் சொன்னீங்கன்னு உங்க பெயரை சொல்லியே சொல்வேன். அப்பத்தான், நீங்க வீட்டுக்கு வரும் போது, டாடி உங்களைத் திட்டுவாங்க" என்று முகத்தை கோபமாக வைத்த படி கூறினான் பவன்.


"ஹே மங்கி, சும்மாயிரு!!!" என்று வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் அவனை அதட்டினாள் லஷ்மீகா.

 

உடனே கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான் பவன்.


***




 









Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *