வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 7

 அத்தியாயம் : 7


கடந்த ஒரு மாத காலமாக தன் கண்களின் வழியே தன்னிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும், தன் மனதை ஈர்த்த காவலனை பற்றி அனைவரிடமும்  கூறினாள் லஷ்மீகா.


அதனைக் கேட்டுவிட்டு அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வியாய் பார்த்து கொண்டனர். 


"லஷ்மீ!!! நான் சொல்றனேன்னு கோ... கோபப்படாதடி. இதெல்லாம் உன் கற்பனை தான்" என்று தனிவான குரலில் கூறினாள் இலியா.


அவளைப் பார்த்தபடி கசந்த புன்னகை சிந்தியவள், "நானும் இது கற்பனையாகிட கூடாதுன்னு தான், இப்ப களத்துல இறங்கி தேடவே ஆரம்பிச்சிட்டேன். என் ஆழ் மனசு சொல்லுது. சீக்கிரம் அவனை நான் மீட் பண்ணிடுவேன்னு"


"உன... உனக்குத் தெரிஞ்ச சிம்டம்ஸை வச்சு, அப்படி ஒருத்தன் இருக்கானான்னு கண்டுபிடிக்க முடியுமான்னு தெரில? ஆனா... உன் ஆழ் மனசு சொல்ற படி, அப்படி ஒருத்தன் இருந்தா, கண்டிப்பா உன்னை விடச் சந்தோஷப்படுறவங்க, நாங்களா தான்டி இருப்போம்" என்று சந்தேஷமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஹே... முதல்ல போலீஸ் ஜாப்ல இருக்கிறவங்களை கூகுள்ள சர்ச் பண்ணிப் பார்ப்போம். அதுல உன் கனவுல வந்த ஆபிஸர் இருக்கிறானான்னு பார்ப்போமா?" எனக் கூறியபடி தன்னுடைய கைப்போனை எடுத்தாள் தர்ஷா. 


"நானும் எனக்குத் தெரிஞ்ச வரை நல்லா சர்ச் பண்ணி பார்த்துட்டேன். அவன் போல யாருமில்ல. ஆனா, அவன் முகம் மட்டும் எனக்குத் தெரிஞ்சவுடனே, அவன் முன்னாடி போய் நிற்பேன்டி" என்றாள் ஆணித்தரமாக... 


"எப்படி உன் கண்ணுக்குள்ள இருக்கிறவனை கண்டுபிடிச்சி நீ.... கல்யாணம் பண்ணிக்கப் போற? எனக்கு உன் பைத்தியகாரத்தனமான முடிவை நினைச்சு கவலையா இருக்குடி" என்றாள் இலியா.


"அவன் ஹைட் ஆறடி, போலீஸ் கட் ஹேர் ஸ்டைல், பிஸ்கட் கலர், முஸ்டாச், பிளாட்டினம் பிரேஸ்லெட் இதலாம் வச்சு அவனை கண்டுப்பிடிக்க முடியாதா?" என்று பைத்தியம் போல லஷ்மீகா கேட்கவும், 


"இதெல்லாம் பொதுவான விஷயம். வேற ஏதாவது தெரிஞ்சா சொல்லுடி?" என்று கோபப்பட்டாள் இலியா.


எப்பவும் வாய் பேசாமல் அமைதியாக இருக்கும் இலியா இன்று தன்னை திட்டிக் கொண்டே இருக்கவும், அவளை முறைத்துப் பார்த்தபடி, "இந்த விஷயத்தை வச்சு தான், நானே தேடிட்டு இருக்கேன். அப்ப கண்டுப்பிடிக்க முடியாதாடி?" என்று சோகமாக ஐஸ்வர்யாவை பார்த்தாள். 


"லஷ்மீ!!! நான் மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் உன் கற்பனை தான்டி" பக்குவமாக அவளுக்கு எடுத்துச் சொல்ல புரிய வைக்க நினைத்தாள் இலியா.


"இது என்னுடைய கற்பனை தான்னு எனக்குப் புரியுதுடி. பட் என் கற்பனையில பார்த்த போலீஸ் ஆபிஸர் மாதிரி ஹைட், வெயிட், கலர்னு நிஜத்துல யாராவது இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கேன். 


ரீல்ல உள்ள பெர்சன் மாதிரி ரியல்லையும் இருப்பாங்கன்னு நீங்க தான அன்னைக்குச் சொன்னீங்க? அந்த மாதிரி கேரக்டரை தான் நான் விரும்புறேன். 


இல்லன்னா வெல் லேண்ட்டான போலீஸ் ஆபிசர் லிஸ்ட்டை கண்டுபிடிச்சி அவனை தேடுவோமா? எனக்கு அப்படி ஒரு போலீஸ் ஆபிசர் தான்டி வேணும். மத்த தத்தி ஆபிஸர் எனக்கு வேணா" என்றாள்.


"சினிமாவுல ஏற்கனவே நடந்ததையோ, இல்ல நடந்துகிட்டு இருக்கிறதையோ, ஏன் நடக்கப் போறதையோ தான் காட்டுறாங்க. அதுல நிஐமும் இருக்கும் பொய்யும் இருக்கும்டி. 


நாங்கலாம் எங்க ஹஸ்பெண்ட் ஃபேமிலின்னு இருக்கிறப்ப, உனக்கோ இல்ல உன் ஃலைப்பிற்கோ சடர்னா ஏதாவது ஆகிடுச்சுன்னா... எங்களால தாங்கவே முடியாது. 


ஏன்னா... நாம அஞ்சு பேரும் யூ.கே.ஜில இருந்து இப்ப வரைக்கும் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். ஃலைப் லாங்கா ஃப்ரெண்ட்ஸாவும் இருப்போம். நாமலாம் ஜாலியா எப்பவும் சந்தோஷமா இருக்கனும்டி. கொஞ்சம் யோசிடி" என்றாள் மனம் கேட்காமல் இலியா.


"ஒரு படத்துல ஹீரோயின் இறந்து போற மாதிரி காட்டுவாங்க. வேறொரு படத்துல ஹீரோ இறந்து போற மாதிரி காட்டுவாங்க. ஏன், நாம பொறக்கும் போதே இறக்க தயராகிடுறோம். டெத்ங்கிறது என்னைக்கு எப்ப... எப்படின்னு தான் நமக்குத் தெரியாதுடி. எப்பவும் நல்லதையே யோசி" எனக் கூறிய லஷ்மீகா… தன் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முயற்சிக்கவில்லை. 


"ஏன்டி நாமெல்லாம் எம்பிஏ தான பிடிச்சிட்டு இருக்கோம்? ஆனா, லஷ்மீ என்னென்னா… சைக்காட்ரிஸ்ட் மாதிரி பேசறா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் தீவிதா.


"ஹே... நான் பொதுவான விஷயத்தை தான் சொல்றேன்டி. இந்த உலகத்துல முதல்ல எல்லா விஷயத்தையும் கற்பனை தான் பண்ணாங்க. அடுத்து தான், அது கைவண்ணமாச்சு. கற்பனை பண்றதுல தப்பில்ல. கற்பனை நல்ல கருவா இருக்கனும். அடுத்து அது கனவா மாறனும். அப்துல்கலாம் சார் சொன்ன மாதிரி, நாம என்னவா ஆகணும்னு நினைக்கிறோமோ... அதுக்கான கனவை காணனும். 


சின்ன வயசில இருந்தே கற்பனை பண்ணலையா... நாம ஒரு டாக்டர் ஆகணும், ஒரு இன்ஜினியர் ஆகணும் அப்படி இப்படினு. அது மாதிரி தான் இந்த கற்பனையும்... 


என்னுடைய மனசை பாதிச்ச அந்த படத்துல இருந்து தான், எனக்குக் கற்பனை உருவாச்சு. அது கனவா மாறிச்சு. இப்ப... ஒரு நல்ல போலீஸ் ஆபிஸருக்கு மனைவியா ஆகணுங்கிற லட்சியமாகிடுச்சு"


"எப்படி? அவனக் கண்டு பிடிச்சிடலாமா?" என்று  லஷ்மீகாவிற்காக மற்றவர்களிடம்  கேட்டாள் ஐஸ்வர்யா.


"டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா, வெல் டேலண்ட்டான, லஞ்சம் வாங்காத, கெட்ட பழக்கமில்லாத முக்கியமா மேரேஜ் ஆகாத போலீஸ் ஆபிஸர்ஸோட லிஸ்ட் கேட்டு வாங்கலாம் வித் பயோட்டாவோட. ஆனா பேமண்ட் எவ்வளவு கேட்பாங்கன்னு தெரியல?" என்றாள் தீவிதா.


"லஷ்மீ!!! என் மச்சான் ஒருத்தர் ப்ரைவெட் டிடெக்டிவ்வா இருக்கார்டி. அவர் கிட்ட நான் கேட்டுப் பார்க்கவா? ஐஸ்வர்யா சொல்லவும் தான், எனக்கும் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது" என்றாள் சந்தோஷமாக தர்ஷா.


"ஓகேடி... அவர் என்னுடைய கேஸை எடுத்துப்பாரானு கேட்டுட்டு, அப்படியே பேமண்ட் பத்தியும் கேட்டுச் சொல்லுடி. டாடி கிட்ட அமெளண்ட் கேட்க முடியாது. அட் த சேம் டைம் பவனுக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது. நீங்க யாரும் அவன் என் கூட இருக்கும் போது, என் ட்ரீம் பாய் பத்தி பேசிடாதிங்க" என்று அனைவரையும் முன் கூட்டியே எச்சரித்தாள் லஷ்மீகா.


"ஓகே!!! அவர் கிட்ட உடனே கேட்கறேன்" என்று தன்னுடைய கைப்போனை எடுத்து விபரத்தை அந்நபரிடம் தெரிவித்தவள், பேசி முடித்துவிட்டு லஷ்மீகாவை சோகமாகப் பார்த்தாள்.


தர்ஷாவின் உதட்டில் இருந்து உதிர போகும் வார்த்தைக்காக தவம் கிடப்பவள் போலத் தவிப்புடன் அவளது முகத்தை நோக்கிய படி இருந்தாள், லஷ்மீகா. 


“ஒன்லாக்ஸ் பேமண்ட் ஆகுமாம்டி" 


"ஒன் லாக்ஸா?" என்று அனைவரும் வாயைப் பிளந்தார்கள்.


"ம்ம்ம்... ஆளுக்கு டொண்டி தவுசண்ட் போட்டா கரைட்டா இருக்கும்ல?"  உடனே ஐஸ்வர்யா சொல்லவும்,


"ஆமாடி!!! நான் நாளைக்கு அமெளண்ட் தர்றேன்" என்று தர்ஷா பதில் கூறவும், அனைவரும் அதே போல் கூறினார்கள்.


யோசித்த வண்ணமிருந்த லஷ்மீகாவோ, "இல்லடி இருக்கட்டும். இன்னும் சிக்ஸ் மன்த்ல ஜாப்க்கு போயிட்டு சொல்றேன். அப்போ ட்ரை பண்ணலாம். அதுவரைக்கும் நாம தேடுவோம். எனக்கு நம்பிக்கை இருக்கு, அவனை சீக்கிரம் நான் கண்டுபிடிச்சிடுவேன்" என்று உறுதியாகக் கூறினாள் லஷ்மீகா.


"எஸ்... இன்னும் சிக்ஸ் மன்த்குள்ள நாம ப்ராஜெக்ட் முடிக்கணும். கேம்பஸ் இன்டர்வியூக்கு ட்ரை பண்ணனும். அதுக்கு அப்புறம் நம்முடைய ட்ரீம்ஸ்லாம் கன்டினியூ பண்ணுவோம். அதுவரைக்கும் நோ சினிமா, நோ அவுட்டிங். ஆனா, லஷ்மீ சொன்ன படி போலீஸ் ஆபிஸரை யாராவது பார்த்தா, உடனே அவங்களை போட்டோ பிடிச்சு லஷ்மீ கிட்ட காட்டுவோம். அவளே அவளுடைய ஃலைப் பாட்னரை செலக்ட் பண்ணிக்கிடட்டும்" என்று நல்ல அறிவுரை கூறினாள் இலியா.


"ஓகே" என்று அனைவரும் ஒட்டு மொத்தமாக உடன் பட்டார்கள்.


"இன்னைக்கு இலியா அநியாயத்துக்கு அறிவாளியா பேசறாள்ல!!!" என்று அவளை கேலி செய்தாள் ஐஸ்வர்யா. 


அன்றிலிருந்து ஒவ்வொருவரும் எந்த போலீஸ் ஆபிஸரையாவது எதார்த்தமாகப் பார்க்க நேர்ந்தால், உடனே அவரை  புகைப்படம் எடுத்து, அதனை லஷ்மீகாவிற்கு அனுப்பினார்கள்.

 

ஒவ்வொரு தடவையும் தன் மனம் கவர்ந்த நாயகனாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் ஆசையுடன் தோழிகள் அனுப்பும் புகைப்படத்தைப் பார்த்தாள். ஆனால், ஒருவர் கூட அவளது ஆசை நாயகனின் கால் தூசிற்கு கூடத் தேராதவர்களாக இருந்தனர். 


அந்த வாரம் பரீட்சை ஆரம்பமானது. அது முடிந்து திட்டபணி ஒப்படைவு செய்வதற்கான நாள் வந்தது. 


அதனை முடித்துவிட்டு அனைவரும் மூச்சுவிடுவதற்குள் 

நேர்முகத்தேர்வு நடைபெற ஆரம்பித்தது. 


ஒவ்வொரு தொழில்ஸ்தாபனமாக நேர்முகத்தேர்வு நடத்த ஆரம்பிக்கவும், அதில் தாங்கள் அனைவருக்கும் ஒன்றாக வேலை கிடைக்கும்படியான ஸ்தாபனமாக பார்த்து தோழிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். 


அவர்கள் முயற்சியின் படி எதிர்பாராவிதமாக அனைவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. 


அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி, மேலும் பரீட்சை, படிப்பு என எல்லாம் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிம்மதியாக வெளியில் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள்.

 

அன்று… தமையனுக்கு பள்ளி விடுமுறை என்று அவனையும் உடன் அழைத்து, தோழிகள் வரச் சொல்லியிருந்த பல்கடை அங்காடிக்கு விரைந்தாள் லஷ்மீகா.

 

அனைவரும் வந்தவுடன், ஆறு மாடி பல்கடை அங்காடிக்குள் நுழைந்து,   தங்களுக்கு வேண்டியதை, ஒருவருடன் ஒருவராக பேசிய படி தேர்வு செய்து முடித்தனர். அதற்கேற்ப நேரமும் விரைந்து சென்று கொண்டிருந்தது.

 

அதனால் மதிய உணவை கூட அங்கேயே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, எந்தப் படத்தை பார்க்கலாம் என்று அவர்களுக்குள் கலந்துரையாடல் ஆரம்பமானது. 


சிங்கம் படத்திற்குப் போகலாம் எனக் கூறினாள் லஷ்மீகா.


"ஹே!!! என்னப்பா போலீஸ் கான்செப்ட் இருக்கிற மூவியா சொல்ற? நீ பேசாம போலீஸாகிடு. அப்பத்தான் உன் ட்ரீம் பாய்யை சீக்கிரம் உன்னால கண்டு பிடிக்க முடியும்” என்று இலியா சொல்லிக் கொண்டிருக்க… 


பவனுக்குத் தெரியாமல் இலியாவிற்கு கை சைகையால், 'பவன் இருக்கிறான் பேசாத' என்று அறிவுறுத்தினாள் லஷ்மீகா. 

 

"அப்ப ஹாரர் படம் வேணா பார்ப்போமா?" என்று இலியாவை கேலியாக பார்த்தாள் தர்ஷா.


"ஹாங் வேணாடி. நைட்டு எனக்குத் தூக்கம் வராது" என்று இலியா கண்களை விழிக்கவும்,

 

"பயந்தாங்குளி" என்று அவளை சடைத்தாள் தீவிதா.


அச்சமயம் பல்கடை அங்காடிக்குள் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரும் கண்ணாடி ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்தனர்.


முதலில் இலியா எழுந்து சென்று  எட்டிப் பார்த்தாள். கீழே காவல் துறையில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். "ஹே லஷ்மீ!!!  இன்னைக்கு உனக்கு ஜாக்பாட் தான்டி. இங்க வந்து பாரேன், எத்தனை போலீஸ்னு?" என்று அழைத்தாள்.

 

"ஏன் போலீஸ் போர்ஸ் வந்திருக்காங்க?" என்று தீவிதா  சொல்லவும், மற்றவர்களும் வந்து எட்டிப் பார்த்தனர்.


லஷ்மீகாவோ ஆர்வமாய் பார்த்தாள். 


"டைம் வேற ஒன் பார்ட்டி ஆகப் போகுது. இப்ப கிளம்பினா தான் படம் போடுறதுக்குள்ள நாம தியேட்டர்குள்ள போக முடியும். இவங்களை கடந்து எப்படி நாம போறது. ஓ.... காட்! இன்னைக்கு நாம படம் பார்க்க முடியாதா?" என்று சோகமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.

 

அவளது கைப்பிடித்து அசைத்து, "ஐஸ் சிஸ்டர், வாங்க நாம படத்துக்கு போவோம். இவங்க வந்தா வரட்டும்" என்றான் பவன்.

 

அவனுக்கு வலிக்காத மாதிரி அவனது தலையில் ஒரு கொட்டு கொட்டிய தர்ஷா, "உனக்கெல்லாம் படம் பார்க்கிற வயசாடா? ஆனா படம் பார்த்துட்டு வீட்டுக்கு போய் லஷ்மீயை மட்டும் நல்லபிள்ளை மாதிரி உன் டாடி கிட்ட போட்டுக் கொடுத்திடு. என்ன?" 


"ஓகே சிஸ்டர்" என்றான் பவன்.


"ஹாங்… சரின்னு சொல்றான் லஷ்மீ. சொன்னதை செஞ்சிடுவானோ?" என்று லஷ்மீகாவை பார்த்தாள் தீவிதா. 

 

"எஸ் சொன்னதை செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்.   டாடி கிட்ட நீங்க சொல்லச் சொன்னீங்கன்னு உங்க பெயரை சொல்லியே சொல்வேன். அப்பத்தான், நீங்க வீட்டுக்கு வரும் போது, டாடி உங்களைத் திட்டுவாங்க" என்று முகத்தை கோபமாக வைத்த படி கூறினான் பவன்.


"ஹே மங்கி, சும்மாயிரு!!!" என்று வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் அவனை அதட்டினாள் லஷ்மீகா.

 

உடனே கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான் பவன்.


***




 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *