வியாழன், 17 பிப்ரவரி, 2022

'மாது+உள்ளம்+பழம்' - ஆரோக்கியம்

 

பெண்களின் உள்ளத்தில் உள்ளதை, பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால்,  'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது என்கின்றனர்

மாதுளம் பழம் பல பாகங்களை, பல உட்பகுதிகளை, பல உட்பிரிவுகளை, பல உட்கூறுகளை கொண்ட ஒரு அழகிய தொகுப்பாகும்.

 

மாதுளை ஒரு நல்ல நிறம் உடைய சத்தான பழம். "முத்துக்களின் ராணிஎன்கிற சிறப்பு பட்டம் பெற்ற, இந்தப் பழங்கள் இளஞ்சிவப்பு, அடர்த்தியான சிவப்பு போன்ற வண்ணங்களில் காணப்படுகின்றன. இதன் முத்துக்கள் வெண்மை மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இவையே பார்ப்பவரைத் தூண்டி, சாப்பிட வைத்து விடும். மாதுளையை உரித்து விதைகளை அப்படியே சாப்பிடலாம். அல்லது மாதுளையில் பழ ரசம் தயாரித்துச் சாப்பிடலாம். மாதுளையை எந்த வகையில் சாப்பிட்டாலும் சுவைக்குப் பஞ்சமே இருக்காது. இந்த மாதுளை பழங்களுக்குசைனீஸ் ஆப்பிள்என்ற செல்லப் பெயரும் உண்டு.

 

மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.  இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு, மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.

 

மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.



மாதுளையின் வகைகள்!

§  ஆலந்தி

§  தோல்கா

§  காபுல்

§  மஸ்கட் ரெட்

§  ஸ்பேனிஷ் ரூபி

§  வெள்ளோடு

§  பிடானா

§  கண்டதாரி

 

மாதுளையில் உள்ள சத்துகள்!

(100 கிராம் மாதுளையில்)

 

§  கலோரி - 83

 

§  வைட்டமின் சி - 17%

 

§  வைட்டமின் கே - 14%

 

§  கார்போஹைட்ரேட் - 14%

 

§  புரதச்சத்து - 14%

 

§  பொட்டாசியம் - 6%

 

§  இரும்புச்சத்து - 4%

 

§  மக்னீசியம் - 3%

 

§  கொழுப்பு - 1%

 

§  நார்ச்சத்து - 16%

 

இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளம்பழத்தின் முத்துக்களை தினமும் ஒரு கைப்பிடியாவது சாப்பிடுங்கள். அதிலும் ஹைபிரிட் பழங்களைத் தவிர்த்து நாட்டுப்பழங்களைத் தேர்தெடுங்கள். மாதுளம்பழம் மகத்தானது... இதில் மாற்றுக்கருத்தே இல்லை!

 

மாதுளையின் பயன்கள்!

பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது; பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது.

 

ஒவ்வொரு ரகத்திற்கும்  தனிப்பட்ட சுவையும் சக்தியும் உண்டு. அது  போல்  சில ரகத்திற்கு  தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு.

 

மஸ்கட் ரெட் மற்றும் ஆலந்தி இனங்களில் உள்ள பழ முத்துக்கள் இளஞ் சிவப்பு, இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும்.

 

இவைகளில் இளஞ் சிவப்பும், இரத்த சிவப்புமே மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.

 

மாதுளை, வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

 

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.

 

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

 

மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது.

 

மாதுளம் பழ விதையில்"Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.

 

மாதுளம் பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும். பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.

 

மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும். மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை

 

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை  உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப்  பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

 

உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

 

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான  ஆற்றல் கிடைக்கும்.

 

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

 

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

 

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

 

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

 

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

 

மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன. தினமும் 100 மி.லி மாதுளம்பழச்  சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

 

மாதுளம் பழம் இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் மாதுளை தோல் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். எலும்பு ஆரோக்கியத்திற்கு மாதுளை தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் பொடி அல்லது உணவுப் பொருட்களை உட்கொள்வது முக்கியம் என்றும், மாதவிடாய் நின்றபின் ஆஸ்டியோபோரோசிஸ் தொடங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

 

புற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு மாதுளை தோல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மாதுளை சாற்றில் ஒரு முன்னெச்சரிக்கையாக புற்றுநோய் செல்களை கண்டறிந்து போராடும் பண்புகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட பண்பானது சருமத்தின் புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

 

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

 

யார்... யார் கட்டாயம் சாப்பிட வேண்டும்?

மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள், உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.

 

கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.

 

நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,

 

உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும்

மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும். மூல நோய்க்கு முதல் காரண மே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச் சிக்கல்தான். இந்த பிரச்சனை உடையவர்கள் கண்டிப்பாக மாதுளம் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்...

 

யார் மாதுளம் சாப்பிட கூடாது?

மாதுளையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளதால் சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை இதை அதிகமாக வாங்கி பயன் பெறுகிறார்கள். ஆனால் இதில் சில தீமைகளும் இருக்கின்றன அது நமது உயிரையும் குடிக்கும் அளவுக்கு கொடுமையானது, அது என்னவென்று பார்ப்போம்.

 

மாதுளை பழம் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் இதனால் அவர்களுக்கு சருமம் அரிப்பு, தொண்டை எரிச்சல், வீக்கம், வயிற்று வலி மற்றும் தேம்பல் போன்ற அறிகுறி மூலமாக நமக்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போன்ற ஏதாவது உங்களுக்கு நேர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், ஏனென்றால் இது போன்ற அலர்ஜி உங்களின் உயிரை குடிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறும்.

 

மாதுளை பழத்தை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் ஏதாவது மருந்து மாத்திரையை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் நமக்கு வேறு ஏதாவது வியாதியின் மூலமாக பாதிப்புகள் இருப்பதினால் நாம் மருந்துகளை உட்கொள்வோம் அதன் சக்திகளை முறியடிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு எனவே இதைப்பற்றி உங்கள் மருத்துவருடன் நன்கு விசாரித்த பின்பு நீங்கள் மாதுளைப் பழத்தை அருந்தவேண்டும்.

 

மாதுளை பழம் உங்களின் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆனால் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது நல்ல விஷயமாகும் அதே சமயத்தில் ரத்தம் அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இது ஆபத்தாக மாற்றியமைக்கும். எனவே உங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் அவ்வப்போது ஏற்படும் போது அந்த சமயங்களில் மாதுளை பழத்தை உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

கர்ப்பிணி பெண்கள் மாதுளைப் பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள் ஏனென்றால் இதை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோகியம் அதிகமாகும் அதே சமயத்தில் கர்ப்பிணி பெண் யாராவது அலர்ஜியினால் பாதிப்படைந்து இருந்தீர்கள் என்றால் இதை தவிர்க்க வேண்டும். இது உங்களை மட்டுமல்லாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மந்தமாக்கிவிடும்.

 

மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் சர்க்கரையை இது குறைக்க உதவும். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நம் உடலில் சர்க்கரையை அதிகரித்துவிடும். இது மட்டுமல்லாமல் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உங்கள் எடையை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மாதுளை பழத்தை முடிந்தவரை குறைவாக உட்கொள்ளுவது நல்லது.

 

நன்றி.. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *